அண்மைய செய்திகள்

recent
-

அச்சுறுத்தலுக்கும் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் தொடர்பு இல்லை!- மன்னார் ஊடகவியலாளர்கள்


மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு 'சியாத் இயக்கம்' என்ற பெயரில் விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலுக்கும், அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என குறித்த மூன்று ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் குறித்த ஊடகவியலாளர்களுக்கும் இடையில் இன்று இரவு அவசர சந்திப்பு ஒன்று மன்னார் தாராபுரத்தில் இடம் பெற்றது. இதன் போதே குறித்த ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

'சியாத் இயக்கம்' என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கு எதிராக செயற்படுவதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் தொடர்பில் வேறு எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அந்த நிலையில் குறித்த கடிதம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அமைச்சர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் எமக்கும் இது வரை எவ்வித தனிப்பட்ட விரோதங்கள் எவையும் இல்லை எனவும் அமைச்சருக்கும் எங்களுக்கும் இடையில் பிரிவினை வாதத்தை தோற்றுவிக்க சில எதிர்ப்பு சக்திகளினால் குறித்த கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என குறித்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்புபட்ட செய்தி:
அச்சுறுத்தலுக்கும் அமைச்சர் றிஸாட் பதீயூதினுக்கும் தொடர்பு இல்லை!- மன்னார் ஊடகவியலாளர்கள் Reviewed by NEWMANNAR on January 17, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.