அண்மைய செய்திகள்

recent
-

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில்திடீரென தீப்பிடித்து எரிந்த படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்(Photos&Video)

இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகொன்று நண்பகலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் 30 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
லண்டன் நாடாளுமன்றத்தின் அருகே நடந்த இந்த விபத்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீப்பிடித்து எரிய தொடங்கியவுடன், செய்வதறியாத நிலையில் மக்கள் தண்ணீருக்குள் குதித்தனர்.

உடனடியாக விரைந்து வந்த மீட்புபடையினர், ஆபத்தில் இருந்த மக்களை மீட்டனர்.

நீரில் நனைந்த மற்றும் குளிரில் பாதிக்கப்பட்டுள்ள 28 பயணிகளுக்கு இரண்டு குழுவினர் சிகிச்சையளித்து வருவதாக லண்டன் அம்பியுலன்ஸ் சேவை தெரிவித்தது.

இதனால் ஏற்பட்ட புகையை சுவாதித்த ஏழு பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீப்பற்றிய படகு லண்டன் டக்டுவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது என நம்பப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி தற்போது எந்த கருத்துக்களை வெளியிட முடியாது என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜோன் பிக்கோஸ் தெரிவித்துள்ளார்.






இங்கிலாந்தின் தேம்ஸ் நதியில்திடீரென தீப்பிடித்து எரிந்த படகு! அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பயணிகள்(Photos&Video) Reviewed by NEWMANNAR on September 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.