அண்மைய செய்திகள்

recent
-

அரசாங்கத்தின் தலையீட்டுடன் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன். வாசு­தேவ நாண­யக்­கார.

அரசாங்கத்தின் தலையீட்டுடன் தொகை தொகையாக வட மாகாணத்தில் சிங்கள மக்களை
குடியேற்றுவதை எதிர்க்கின்றேன் . ஆனால் , சிங்கள மக்களாகட்டும் , தமிழ் மக்களாகட்டும் அனைவரும் சுயவிருப்பதோடு எங்கும் வாழலாம் . அதனை தடைசெய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .
 
வடக்கில் மக்கள் வாழும் இடங்களில் இராணுவ நடமாட் டத்தைத் தடைசெய்ய வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார் .
 
இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் ,
 
சிங்கள மக்கள் தமது வர்த்தகம் மற்றும் தொழில்கள் நிமித்தமும் , சுயவிருப்பத்துடனும் வடக்கில் குடியேறுவதை தடுப்பதும் எதிர்ப்புத் தெரிவிப்பதும் ஏற்றுக்கொள்ள முடி யாதது .
 
முதலமைச்சரின் அந்த நிலைப்பாட்டை எதிர்க்கின்றேன் . வடக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக அவ்வாறான ஒரு நிலை உருவானால் தெற்கிலும் தமிழ் மக்கள் வந்து குடியேற முடியாது . அதற்கு இடமளிக்கமாட்டோம் என சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புக்கள் கிளம்பும் .
 
இது மீண்டும் இனங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் . இனவாதத்திற்கு சாதகமாக அமைந்துவிடும் .
 
எனவே , சிங்கள மக்கள் தமது சுயவிருப்பின் பேரில் வடக்கில் மட்டுமல்ல எங்கும் வாழமுடியும் . அதேபோன்று தமிழ் மக்களும் தமது சுயவிருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும் . இதற்குத் தடைபோட எவருக்கும் அதிகாரம் இல்லை .
 
அர - சாங்கம்
 
ஆனால் , அரசாங்கத்தின் தலையீட்டுடன் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசங்களில் வடக்கில் தொகை தொகையாக சிங்கள மக்களை குடியேற்றுவதை எதிர்க்கின் றேன் .
 
அதேபோன்று , தமிழ் மக்களை சிங்களப் பிரதேசங்களில் குடியேற்றுவதையும் எதிர்க்கின்றேன் . வடக்கில் மக்கள் குடியிருக்கும் பிரதேசங்களில் இராணுவம நடமாடுவதை தடைசெய்ய வேண்டும் .
 
இராணுவத்தினர் அவர்களுக்குரிய இடங்களில் இருக்க வேண்டும் . அத்தோடு , சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தினரின் தலையீட்டை இல்லாது செய்ய வேண்டும் . தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உளவுப் பிரிவினர் நடமாடலாம் . ஆனால் , இராணுவச் சீருடையுடன் மக்கள் மத்தியில் நடமாடுவதென்பது , மக்கள் மத்தியில் அச்சத்தையும் , தாம் இராணுவ மயமாக்கலுக்குள் சிக்கியிருக்கின்றோம் என்ற உணர்வை ஏற்படுத்தும் .
 
வடக்கிற்கு இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை வழங்கியுள்ளது . அதனை சுவாசிக்க மக்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் .
 
பொலிஸ் அதி - காரம்
 
எந்தவொரு மாகாண சபை முதலமைச்சருக்கும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை . எனவே , வடக்கு முதலமைச்சருக்கும் அதே நிலைதான் .
 
பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதா ? இல்லையா என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும் .
 
ஆளுநர்
 
இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன் . சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார் .
 
அரசாங்கத்தின் தலையீட்டுடன் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன். வாசு­தேவ நாண­யக்­கார. Reviewed by Author on October 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.