அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் இன்று தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளனர்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் இன்று தென்னாபிரிக்காவிற்கு பயணமாகவுள்ளனர். இலங்கை தொடர்பிலான செயற்பாடுகளுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸை சேர்ந்த சிறப்புத் தூதுவர் ஒருவர் தென்னாபிரிக்கா அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 இந்தநிலையில் குறித்த தூதுவர் இலங்கைக்கு அண்மையில் வருகைதரவுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு இலங்கையின் தூதுக்குழு ஒன்று கடந்த பெப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா சென்று சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது. அதனடிப்படையில் இலங்கைக்கு வருகை தரமுன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுவார்த்ததை நடாத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி அவரின் அழைப்பின் பேரிலேயே கூட்டமைப்பினர் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர். 

 தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராசா, சுரேஸ்பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ சுமந்திரன் ஆகிய ஐவரும் செல்லவுள்ளனர். இதேவேளை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையின் போது தென்னாபிரிக்கா நடு நிலமை வகித்திருந்தது. மேலும் தென்னாபிரிக்காவின் பயணத்தைத் தொடர்ந்து கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழ் நிருபர். கருத்துகள்
சம்பந்தன் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் இன்று தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளனர். Reviewed by NEWMANNAR on April 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.