அண்மைய செய்திகள்

recent
-

தள்ளாடியில் அமைந்துள்ள விநாயகர் சிலை உடைப்பு மன்னார் மாவட்ட இந்து மகாசபை கடும் கண்டனம்-படங்கள்



மன்னார் தள்ளாடிக்கும் மாந்தைச் சந்தி வீதிக்கும் இடையில் அமைந்துள்ள விநாயகர் சிலை 06.04.2014 ஆம் திகதி இனம் தெரியாதோரால் உடைத்து எறியப்பட்டமைக்கு இந்து மகாசபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

அன்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் உடைக்கப்படுவது ஒரு பொழுது போக்கு நிகழ்வாக காணப்படுகின்றது. சம்பவ இடத்திற்க்கு விரைந்த இந்து மகாசபையினர் நேரில் பார்வையிட்டதோடு மன்னார் பொலிசில் முறைப்படி முறையிட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


இனமத ஐக்கியத்தை சீர்குலைக்கும் இச்செயற்பாடுகளை இனிமேல் அனுமதிக்கமுடியாது எனவும் இவ் நாசவேலைகளில் ஈடுபடுவோர் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஒரு இந்து ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பாக மன்னார் நீதிமன்றில் வழக்கு நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.







தள்ளாடியில் அமைந்துள்ள விநாயகர் சிலை உடைப்பு மன்னார் மாவட்ட இந்து மகாசபை கடும் கண்டனம்-படங்கள் Reviewed by NEWMANNAR on April 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.