அண்மைய செய்திகள்

recent
-

ஈவ்டீசிங் வாலிபர்களை தட்டிக்கேட்ட சகோதரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு நிறுத்திவைப்பு

ஹரியனா மாநிலத்தில் பேருந்து மற்றும் பூங்காவில் தங்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்களை தட்டிக்கேட்டு அடித்து உதைத்த சகோதரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பரிசை அரசு நிறுத்தி வைத்துள்ளது.


இந்த வார தொடக்கத்தில் இருந்து பெண் கொடுமைகளுக்கு எதிரான அதிரடி கதாநாயகிகளாக பார்க்கப்படும் ஹரியானா சகோதரிகள், பேருந்தில் பயணம் செய்த வாலிபர்களை வேண்டும் என்றே அடித்தார்களோ? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக சகோதரிகள் இருவரிடம் மூன்று வாலிபர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால் போலீஸ் விசாரணையின் போது இளைஞர்கள் மூவரும் தாங்கள் அப்பாவிகள் என்றும், இரு சகோதரிகளிடம் எவ்வித அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தனர்.
மேலும் அப்பெண்கள் மூன்று வாலிபர்களை அடிக்கும் போது, கர்ப்பிணி பெண் ஒருவர் அக்காட்சிகளை படமெடுத்தாகக் கூறப்பட்டது. ஆனால் அந்த பெண்ணை இது வரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் சகோதரிகள் இருவரும் பூங்கா ஒன்றில் வாலிபரை அடிக்கும் மற்றொரு வீடியோ காட்சி வெளியானது. இது பற்றி தனியார் தொலைக்கட்சியில் பேசிய அப்பெண்கள், தங்களை அநாகரிகமாக பேசிய வாலிபரை தாக்கியதாக தெரிவித்தனர். இதையும் யாரோ ஒருவர் படம் பிடித்ததாக இருவரும் கூறினார்கள். இந்த வீடியோவையும் யார் எடுத்தார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
சகோதரிகள் இருவர் மட்டும் சம்பந்தப்படும் வீடியோக்களை யார்தான் எடுத்தார்கள் என்பதற்கு சரியான விடையும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் கத்தாரை சந்தித்த மூன்று வாலிபர்களின் குடும்பத்தினர், இரு தரப்பையும் தீர விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது அவர், விசாரணை யாருக்கும் சாதகமாக இல்லாமல் நேர்மையாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
மேலும் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்படுவதாக இருந்த பரிசுத்தொகையை காவல்துறை விசாரணை முடியும் வரை நிறுத்தி வைக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈவ்டீசிங் வாலிபர்களை தட்டிக்கேட்ட சகோதரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பரிசு நிறுத்திவைப்பு Reviewed by NEWMANNAR on December 04, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.