முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து-ஒருவர் படுகாயம்.(Photos)
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டு மன்னார் முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தின் வாகன சாரதி படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர் முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தின் சாரதியான சிவச்சாமி(வயது-50) என மன்னார் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7.10 மணியளவில் முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது.
-கொழும்பில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் மாலை 5.45 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தை வந்தடைவது இலங்கை புகையிரத திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நேர அட்டவணையாக உள்ளது.
-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (27) தாமதித்து வருகை தந்த நிலையில் இரவு 7.10 மணியளவில் முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பிக்கப் ரக வாகனத்துடன் புகையிரதம் மோதியுள்ளது.
இதன் போது குறித்த பிக்கப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து முருங்கன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
-முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்திற்குற்கு சொந்தமான குறித்த வாகனமே புகையிரதத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
-மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை பாதுகாப்பற்ற பல புகையிரத கடவைகள் காணப்படுகின்றது.
இந்த நிலையில் செம்மண் தீவு பகுதியில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே குறித்த விபத்து இடம் பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து தலைமன்னார் துறைக்கான புகையிரத சேவைகள் தொடர்பான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ள போதும் உரிய நேரத்திற்கு அந்த சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் தாமதத்தின் காரணமாகவே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நிருபர்
(27-04-2015)
படுகாயமடைந்தவர் முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்தின் சாரதியான சிவச்சாமி(வயது-50) என மன்னார் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 7.10 மணியளவில் முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம் பெற்றுள்ளது.
-கொழும்பில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட புகையிரதம் மாலை 5.45 மணியளவில் தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தை வந்தடைவது இலங்கை புகையிரத திணைக்களத்தினால் வழங்கப்பட்ட நேர அட்டவணையாக உள்ளது.
-இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் கொழும்பில் இருந்து தலைமன்னார் துறை புகையிரத நிலையத்தை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (27) தாமதித்து வருகை தந்த நிலையில் இரவு 7.10 மணியளவில் முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பிக்கப் ரக வாகனத்துடன் புகையிரதம் மோதியுள்ளது.
இதன் போது குறித்த பிக்கப் வாகனத்தின் சாரதி படுகாயமடைந்து முருங்கன் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
-முருங்கன் நீர்ப்பாசன திணைக்களத்திற்குற்கு சொந்தமான குறித்த வாகனமே புகையிரதத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளது.
-மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை பாதுகாப்பற்ற பல புகையிரத கடவைகள் காணப்படுகின்றது.
இந்த நிலையில் செம்மண் தீவு பகுதியில் உள்ள குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே குறித்த விபத்து இடம் பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து தலைமன்னார் துறைக்கான புகையிரத சேவைகள் தொடர்பான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ள போதும் உரிய நேரத்திற்கு அந்த சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் தாமதத்தின் காரணமாகவே இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நிருபர்
(27-04-2015)
முருங்கன் செம்மண் தீவு பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து-ஒருவர் படுகாயம்.(Photos)
Reviewed by NEWMANNAR
on
April 28, 2015
Rating:
No comments:
Post a Comment