அண்மைய செய்திகள்

recent
-

மலசல கூடப் பயனாளிகளுக்குக் காசோலை வழங்கி வைப்பு.-Photos



நானாட்டான் பிரதேசத்தின் செம்மண்தீவு,சிறுகண்டல் மற்றும் பரிகாரிகண்டல் ஆகிய பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான முதலாம்கட்ட நிதிக் கொடுப்பனவு 14.05.2015 அன்று நானாட்டான் பிரதேச செயலகத்தில் பி.ப 4.00 மணியளவில் நடைபெற்றது.இத்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் ‘யுனிசெப்’ நிறுவனத்தின் வழிக்காட்டலுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் மன்னார் மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுவருகின்றது. 

மேற்படி நிகழ்வானது இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார்மாவட்ட கிளையின் கௌரவ தலைவர் திரு.ஜே.ஜே.கெனடி அவர்களின் தலைமையில் நானாட்டான் பிரதேசசெயலாளர் திரு.பரமதாசன், நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி திரு.வெற்றிநாதன், இலங்கை செஞ்சிலுவைச் சங்க மன்னார்மாவட்டக் கிளை நிறைவேற்று அதிகாரி திரு.குகன் மற்றும் நானாட்டான் பிரதேச சபை ஊழியர்கள் இவர்களுடன் பொதுமக்கள் பலரின் பங்கேற்றலுன் இடம்பெற்றது.






மலசல கூடப் பயனாளிகளுக்குக் காசோலை வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.