அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் 172 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம்


பாதுகாப்பு படையினர் கோரியிருக்கும் காணிகளை தவிர வேறு எக் காணிகளிலும் படையினர் நிலை கொண்டிருக்க அனுமதிக்க வேண்டாம் என மன்னார் மாவட்ட செயலாளர் தேசப்பிரிய பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மன்னார் நானாட்டான் முசலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் காணிகளை சுவீகரிப்பதற்கு பாதுகாப்பு படையினர் விண்ணப்பித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது. அதன் போதே மாவட்ட செயலாளர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் 16 இடங்களும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 4 இடங்களும் முசலி பிரதேசப் செயலாளர் பிரிவில் 4 இடங்களும் என மொத்தமாக 172 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக பாதுகாப்பு படையினர் விண்ணப்பித்துள்ளனர். எனவே பாதுகாப்பு படையினர் விண்ணப்பித்திருக்கும் இடங்களை தவிர வேறு இடங்களில் இராணுவ முகாம்களை அமைக்க அனுமதிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 172 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க திட்டம் Reviewed by Author on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.