அண்மைய செய்திகள்

recent
-

பர்மா முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேசத்தை வலியுறுத்த வேண்டும்: உலமா கட்சி


பர்மாவில் முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு முஸ்லிம் கட்சிகள் பாராளுமன்றத்தில் சர்வதேசத்தின் தீர்வை வலியுறுத்தி பேச வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி அக்கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளதாவது, பல வருடங்களாக மியான்மார் எனும் பர்மா முஸ்லிம்கள் அந்நாட்டு ஆட்சியாளர்களால் பாரிய கொடுமைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். இது பௌத்த மதத்துக்கும் பாரிய அபகீர்த்தியை உண்டாக்குகிறது என்பதே உண்மையானதாகும். அம்மக்கள் பாரிய இனஅழிப்புக்கும் மனிதாபிமானமற்ற, கொடூரமான தாக்குதல்களுக்கும் முகம் கொடுப்பதையும், இவற்றை தாங்க முடியாமல் நாட்டிலிருந்து வெளியேறி கடலில் தத்தளிப்பதையும் சர்வதேச ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன. இலங்கையில் நடைபெற்ற போராட்ட இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பாரிய அளவில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐ நா அப்பாவி பர்மா முஸ்லிம்கள் பற்றி விசாரணைகளை மேற்கொள்ளாமலிருப்பது கவலைக்குரியதாகும்.
பர்மா முஸ்லிம்கள் தொடர்பில் சர்வதேசத்தை வலியுறுத்த வேண்டும்: உலமா கட்சி Reviewed by Author on May 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.