பீடாதிபதியும் விரிவுரையாளருமாகிய திரு.க.பேர்ணாட் அவர்களின் இலங்கையில் கல்வி நூல்வெளியீட்டு விழா-Photos
மன்னாரில் இன்று நூல்வெளியீட்டு விழா வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியும் விரிவுரையாளருமாகிய திரு.க.பேர்ணாட் அவர்களின் இலங்கையில் கல்வி எனும் தலைப்பில் இன்று 27-06-2015 காலை 10 மணிக்கு மன்னார் வலையக்கல்விப்பணிமனையின் கேட்போர்மண்டபத்தில் நடைபெற்றது.
மங்கள விளக்கேற்றல் இறைவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது வரவேற்புரையும் தலைமையுரையும். ஞானராஜ் பிரதமவிருந்தினராக அருட்பணி தமிழ்நேசன் அவர்களும்.
சிறப்பு விருந்தினர்களாக எம்.எம்.சியான் வலையக்கல்விப்பணிப்பாளர் அவர்களும் யு.து.குருஸ் அவர்களும் இவர்களோடு நயவுரைவழங்கிய எம்.சிவானந்தன் அதிபர் தலைமன்னார் முதல் பிரதியை பிரபலவர்த்தகர் அ.ரினீஷ் பெர்னாண்டோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விழாவில் கல்வியின் முக்கியத்துவம் ஆசிரியர்களின் அதிபர்களின் பங்கு மாணவர்களின் மீது செலுத்தப்படவேண்டிய கவனம் கற்றல் முறைகள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் இடையிலான உறவுமமுறைகள் உரையாடல்கள் கல்வி கற்பித்தல் முறைகள் என்பன இலங்கையில் எவ்வாறான நிலையில் உள்ளது. என்பதை இலங்கையில் கல்வி எனும் தலைப்பில் 13 தலைப்புக்களில் அலசி ஆராய்ந்துள்ளார் இது இவரின் இரண்டாவது நுலாகும்
கற்பவனாய் இரு…
கற்றுக் கொள்பவனாய் இரு…
கற்பவனுக்கு உறுதுணையாக இரு…
இவ்வாக்கியம் கல்வியின் முக்கியத்துவத்தை பறைசாற்றி நிற்கின்றது சிறப்புவிருந்pனர் பிரதமவிருந்தினர் உரைகளோடு தன்னிடம் கல்வி கற்ற மாணவர்களான தற்போது ஒவ்வொரு பணியிலும் உள்ளவர்கள் தனது ஆசானை கௌரவப்படுத்தும் விதமாக அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
பீடாதிபதியும் விரிவுரையாளருமாகிய திரு.க.பேர்ணாட் அவர்களின் இலங்கையில் கல்வி நூல்வெளியீட்டு விழா-Photos
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:
No comments:
Post a Comment