நானாட்டான்,முசலி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
நானாட்டான்,முசலி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய அலுவலக கட்டிட திறப்பு விழாவும்,25 ஆவது ஆண்டு வெள்ளி விழா நிகழ்வும் நேற்று சனிக்கிழமை(27) உயிலங்குளம் பெரிய கட்டைக்காட்டில் அமைக்கப்பட்ட புதிய அலுவலகத்தில் இடம் பெற்றது.
நானாட்டான்,முசலி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் வே.கதிரேசன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண விவசாய கமநல சேவைகள் அமைச்சர் மொ.ஐங்கரநேசன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண மதுவரி உதவி ஆணையாளர் வி.கிறிஸ்ரியோசப், மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் கே.ரவீந்திரநாதன்,மன்னார் மதுவரி திணைக்கள பொருப்பதிகாரி ரி.நந்தகுமார்,மன்னார் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-இதன் போது பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்ட வடமாகாண விவசாய கமநல சேவைகள் அமைச்சர் மொ.ஐங்கரநேசன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து நானாட்டான்,முசலி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் வெள்ளி விழா மலர் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டதோடு சங்கத்தில் இது வரை சேவை செய்த தலைவர்கள்,ஓய்வு பெற்ற பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டதோடு அதிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நானாட்டான்,முசலி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 28, 2015
Rating:
No comments:
Post a Comment