அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு



இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் இன்று புதன் கிழமை(15) காலை மன்னார் புகையிரத நிலைய வீதியில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோனதிராசா அவர்களினால் குறித்த அலுவலம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேற்பாளர்களின் அறிமுகமும் இடம் பெற்றது.

மன்னாரில் போட்டியிடும் வர்த்தகர் சாள்ஸ் நிர்மலநாதன்,வவுனியாவில் போட்டியிடும் வங்கி முகாமையாளர் றோய் ஜெயக்குமார், மற்றும் முல்லைத்தீவில் பெண்கள் சார்பாக போட்டியிடும் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகிய வேட்பாளர்களின் அறிமுகம் இடம் பெற்றது.

இதன் போது வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா,கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழரசுக்கட்சியில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினர்.

இதன் போது தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் என நூற்றுக்கனக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.






இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on July 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.