மன்னார் வங்காலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவகம் நேற்று(4) செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் வங்காலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வங்காலை கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து குறித்த அலுவலகம் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் நேற்று(4) செவ்வாய்க்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும்,வேட்பாளர்களுமான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்திஆனந்தன்,எஸ்.வினோநோகராதலிங்கம் ,வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து வேட்பாளர்களின் உரைகளும் இடம் பெற்றது.இதன் போது வங்காலை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் வங்காலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
August 05, 2015
Rating:
No comments:
Post a Comment