அண்மைய செய்திகள்

recent
-

முத்தரிப்புத்துறை கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடிவு-செல்வம் அடைக்கலநாதன்.

முத்தரிப்புத்துறை கிராம மக்கள் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவுள்ளதாக அக்கிராம மக்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

கடந்த காலங்களில் தேர்தல் நேரங்களில் மக்களை பல்வேறு வகையில் குழப்பங்களுக்கு உள்ளாக்கிய தமிழ் மக்களின் வாக்குகளை சிதரடிக்க செய்யும் நடவடிக்கைகள் இடம் பெற்று வந்தது.

ஆனால் தற்போது இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் முத்தரிப்புத்துறை கிராம மக்கள் ஒன்றிணைந்து இம்முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதாக முடிவெடுத்துள்ளனர்.

குறித்த முடிவிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு வரவேற்பளிப்பதோடு முத்தரிப்புத்துறை கிராம மக்களின் முடிவுகளைப் போன்று ஏனைய கிராம மக்களும் செயற்பட வேண்டும்.என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லம் அடக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

முத்தரிப்புத்துறை கிராம மக்கள் ஒட்டுமொத்தமாக த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்க முடிவு-செல்வம் அடைக்கலநாதன். Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.