அண்மைய செய்திகள்

recent
-

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றியே தீருவோம்...


எதிர்க்­கட்சித் தலை­வரை பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் நாம் தொடர்ந்தும் ஈடு­ப­டுவோம். அதில் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு இட­மில்லை. நாம் விட்­டுக்­கொ­டுக்­கவும் மாட்டோம். எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல் கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குண­வர்த்­தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரி­வித்­தனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் தொடர்பில் அடுத்­த­வா­ரமும் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம். நேற்று முன்­தினம் சபா­நா­ய­க­ருக்கு நாம் இதுதொடர்­பான விட­யங்­களை எடுத்­துக்­கூ­றி­ய­போது எமது பக்க நியா­யத்தை அவர் ஏற்­றுக்­கொண்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

எதிர்க்­கட்சித் தலைவர் விவ­காரம் தொடர்பில் சபா­நா­ய­கரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யமை தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே தினேஷ் குணவர்த்தனவும் விமல் வீரவன்சவும் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டனர்.

மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ்குணவர்த்தன குறிப்பிடுகையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணி­யி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சியில் இருக்­கின்ற எமது அணியில் அதி­க­மான எம்.பி.க்கள் இடம் பெற்­றுள்­ளனர். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகிய கட்­சி­களில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களை விட எமது அணியில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்களின் எண்­ணிக்கை அதி­க­மாகும்.

எனவே எமது அணிக்கே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­க­வேண்டும். இந்த விடயம் தொடர்பில் நாங்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினோம். இதன் போது எமது பக்க நியாயம் மற்றும் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி எமக்கே கிடைக்­க­வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம். இந்த விவ­கா­ரத்தில் எமது பக்­கத்தில் நியாயம் இருப்­பதை சந்­திப்­பின்­போது சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரியர் உணர்ந்து கொண்டார்.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி விவ­கா­ரத்தை பொறுத்­த­வரை எதிர்க்­கட்சித் தலை­வரை பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில் நாம் தொடர்ந்து ஈடு­ப­டுவோம். அதில் விட்­டுக்­கொ­டுப்­பிற்கு இட­மில்லை. நாம் விட்­டுக்­கொ­டுக்­கவும் மாட்டோம். எதிர்­வரும் வாரத்­திலும், சபா­நா­ய­கரை சந்­தித்து மேலும் விட­யங்­களை முன்­வைப்போம். சபா­நா­ய­கரின் தீர்ப்பை நாம் சவா­லுக்கு உட்­ப­டுத்த மாட்டோம். ஆனால் எமக்கு நியாயம் கிடைக்­க­வேண்டும். நியா­ய­மற்ற முறையில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளதை ஏற்க முடி­யாது.

எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை நாங்கள் பெற்­றுக்­கொள்ளும் வரை எமது முயற்­சி­களை தொட­ருவோம். இதே­வேளை மஹிந்­த­ரா­ஜ­ப­க்ஷவின் கடந்த அர­சாங்கம் அதி­க­மான அமைச்­சர்­களை கொண்­டுள்­ள­தாக விமர்­சித்தே நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. அத்­துடன் அமைச்­ச­ரவை அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை 30 ஆக வரை­ய­றுப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர். ஆனால் இன்று அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்­கையை பாரிய அளவில் அதி­க­ரித்­துக்­கொண்­டுள்­ளனர்.

தேசிய அர­சாங்கம் அமைத்­தாலும் அமைச்­சர்­களின் எண்­ணிக்­கையை அதிகரிக்காமல் செயற்பட்டிருக்கலாம். ஆனால் சிவில் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சுக்களை அதிகரித்துக் கொண்டுள்ளனர். இதனை நாங்கள் எதிர்க்கின்றோம். அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் கூட தேசிய அரசாங்கத்தை கொண்டு சென்றிருக்கலாம் என்றார்.

இது தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில்,

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலர் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனால் கட்சியின் ஏனைய உறுபினர்களை கட்சியின் தலைமைதத்துவம் உட்பட உயர்மட்ட குழுவினர் புறக்கணிக்கின்றனர். பாராளுமன்றத்திலும் எமது உரிமைகளை முடக்கும் வகையில் செயற்படுவதை எம்மால் அனுமத்திக்க முடியாது. கடந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியில் இருக்கும் போது இவ்வாறான சிக்கல் நிலைமைகள் இருக்கவில்லை. எனினும் இன்று நல்லாட்சி என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தில் முழுமையாக அடக்குமுறைகளும் சர்வாதிகார போக்குமே உள்ளது.

இப்போதிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளை இணைத்தாலும் கூட எமது எண்ணிக்கையளவில் வராது. ஆகவே எமது அணியினர் தான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். சம்பந்தனை நீக்கிவிட்டு எமது அணியினர் சார்பில் குமார் வெல்கமவை நியமிக்க வேண்டும் அதை தொடர்ந்தும் நாம் வலியுறுத்துவோம். அதேபோல் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது நாம் எதிர்க்கட்சியாக செயற்பட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றியே தீருவோம்... Reviewed by Author on September 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.