மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவு
மன்னார் மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்புக்கள் சற்று முன் நிறைவடைந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 3867 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்த போதும் 1083 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளனர்.
மாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய 12 பேர் போட்டியிட்டுள்ளனர்.தற்போது வாக்களிப்புக்கள் இடம் பெற்ற மன்னார்,மாந்தை மேற்கு,மடு,நானாட்டான்,முசலி ஆகிய 5 பிரதேசச் செயலகங்களிலும் வாக்குகள் கணக்கிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்;டு வருவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் 28 வீதமான வாக்குப்பதிவு
Reviewed by NEWMANNAR
on
November 07, 2015
Rating:
No comments:
Post a Comment