விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விடுதலை.(படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுவர் தொழிலாளர்கள் உற்பட 44 இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றம் இன்று புதன் கிழமை(6) விடுதலை செய்துள்ளது.
இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பு மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பு ஆகிய பகுதிகளில் வைத்து 44 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்துறை மற்றும் மன்னார் பொலிஸ் ஊடாக குறித்த 44 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குறித்த 44 இந்திய மீனவர்களில் 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் 06 சிறுவர் தொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னாரில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டதோடு ஏனைய 38 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த 44 இந்திய மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துறை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினூடாக மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்;டது.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும்,சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 சிறுவர் தொழிலாளர்களும் இன்று புதன் கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்றகொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த 44 மீனவர்களையும் விடுதலை செய்தார்.
குறித்த மீனவர்கள் உடனடியாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் நிருபர்
6-04-2016
இலங்கை கடற்பகுதியில் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பு மற்றும் தாழ்வுபாட்டு கடற்பரப்பு ஆகிய பகுதிகளில் வைத்து 44 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்துறை மற்றும் மன்னார் பொலிஸ் ஊடாக குறித்த 44 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
குறித்த 44 இந்திய மீனவர்களில் 6 சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்த நிலையில் 06 சிறுவர் தொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னாரில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டதோடு ஏனைய 38 இந்திய மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த 44 இந்திய மீனவர்களின் விடுதலை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துறை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தினூடாக மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்;டது.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 38 இந்திய மீனவர்களும்,சிறுவர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 சிறுவர் தொழிலாளர்களும் இன்று புதன் கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதன் போது விசாரனைகளை மேற்றகொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த 44 மீனவர்களையும் விடுதலை செய்தார்.
குறித்த மீனவர்கள் உடனடியாக கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளினூடாக இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் நிருபர்
6-04-2016
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 44 இந்திய மீனவர்கள் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக விடுதலை.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 06, 2016
Rating:
No comments:
Post a Comment