அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 44 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்.


குறித்த மீனவர்கள் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த விளக்கமறியல் உத்தரவை பிரப்பித்தார்.


மேலும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக வயது குறைந்த 06 சிறுவர் தொழிலாளர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை சிறுவர் பராமறிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.





மன்னார் நிருபர்

5-04-2016
இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 44 தமிழக மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. Reviewed by NEWMANNAR on April 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.