அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாலை பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.-Photos


மன்னாரில் இன்று வியாழக்கிழமை காலை முதல் இடம் பெற்று வந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் மதியம் 1.15 மணிமுதல் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

-இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று காலை 4 மணிமுதல் மதியம் 12.45 மணிவரை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

-இந்த நிலையில் மதியம் 12.45 மணிளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் உப்பாலி பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ ஆகியொரும் கலந்து கொண்டிருந்தனர்.

பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக எதிர் வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு தற்காலிகமாக காணக்காளர் காரியாலயம் ஒன்று உடன் திறக்கப்பட்டு புதிய கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படுவார் என உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் உப்பாலியின் உறுதி மொழியையடுத்து பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட பணியாளர்கள் மதியம் 1.15 மணியளவில் தமது பணிப்பகிஸ்கரிப்பை கைவிட்டு மீண்டும் சேவையினை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் சாலை பணியாளர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது.-Photos Reviewed by NEWMANNAR on May 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.