தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி (செவ்வாய்) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று (31) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
-இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து டொலர் படகு ஒன்றில் மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் 7 இந்திய மீனவர்களை கடல் றோர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்துள்ள நிலையில் குறித்த மீனவர்கள் 7 பேரூம் உடனடியாக தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தலைமன்னார் கடற்படையினர் விசாரனைகளின் பின் குறித்த 7 தமிழக மீனவர்களையும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் குறித்த இந்திய மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா குறித்த ஏழு தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உதத்ரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.(படம்)
Reviewed by Author
on
June 01, 2016
Rating:
No comments:
Post a Comment