அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய (24-07-2016) கேள்வி பதில்

கேள்வி பதில் -வாசகர்களுக்கான  அறிவித்தல்   

எமது மன்னார் இணையத்தில் தினமும் வெளிவரும் வாசர்களுக்கான கேள்வி பதில் - பகுதி இனிமேல் வாசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வாரத்தில் மூண்று நாட்கள் பிரசுரிக்கப்பட உள்ளது .
ஞாயிறு ,புதன் மற்றும் வெள்ளி நாட்களில் பிரசுரிக்க படும் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகின்றோம் .


கேள்வி:-

மதிப்பிற்குரிய வழக்கறிஞர் சுதன் ஐயா!நான் மட்டக்களப்பு நாவற் காட்டிலிருந்து சண்முகம்.ஐயா!நீண்­ட­கா­ல ­குத்­த­கையில் பெறும் காணி­களுக்கு எவ்­வ­ளவு குத்­த­கைப்­பணம் செலுத்­த­ வேண்டும்­.அதன் நட­முறை என்ன?

பதில்:−

அன்பான சகோதரரே! இலங்கை காணியுறுத்துச் சட்டத்தின் படி,குத்­தகை நிபந்­த­னையில் உள்­ள­வாறு குத்­தகை செலுத்­த­வேண்டும்.முதல் வருடம் மட்டும் குத்­த­கைப்­ப­ணமும் அடாத்­துக்­கா­ணி­யாயின் தண்­டப்­ப­ணமும்,முறை­யாக வழங்­கப்­பட்ட காணி­யாயின் வருட குத்­த­கை­யுடன் பிறீ­மியம் (Premium)அற­வி­டப்­படும். அதன் பின் குத்­தகை வருடா வருடம் அற­வி­டப்­ப­டும். தண்­டப்­பணம் = அபி­வி­ருத்தி அடைந்த பெறு­ம­தியின் 4வீதமும் அதன் மூன்று மடங்கும் அறவிடப்படும்
(உ–-ம்) அபி­வி­ருத்தியடைந்த பெறு­மதி 10000ரூபா எனின் தண்­டப்­பணம் = 100,000 x 4/100 x 3 = 12,000/- வாக­வி­ருக்கும்.
(பிரி­மியம்) = அபி­வி­ருத்தி அடை­யாத பெறு­ம­தியின் 4வீதமும்­ அதன் 3 மடங்கும், இத­னுடன் குத்­தகைக் காசு சேர்த்து முதல் வருடம் கட்ட வேண்டும்.குத்­த­கைக்­காசு அபி­வி­ருத்தி அடையா பெறு­ம­தியின் நான்­கு­வீ­த­மாக கணிக்­கப்­படும்.
உதா­ர­ண­மாக அபி­வி­ருத்தி அடையா பெறு­மதி ரூபா 50,000 எனின் குத்­தகை = 50000 x 4/100 = ரூபா 2000 = ஆ­கவே குத்­தகை அமையும்.
காணி­ ஒன்­றுக்­காக விலை மதிப்­பீட்­டா­ள­ரிடம் மதிப்­பீட்டை பெற விண்­ணப்­பிக்கும் போது காணியின் அபி­வி­ருத்­தி­ய­டை­யாத பெறு­ம­தியும் அபி­வி­ருத்தி அடைந்த பெறு­ம­தியும் பெற­வேண்டும்.(ஆண்­டுக்­கான குத்­த­கைக்­கு­ரிய குத்­தகைக் கூலிக்­கான வீதம் காணிக்­கட்­டளை 217 இல் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.)சில குத்­தகை 5 வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை மீளாய்வு செய்­யப்­படும்.
ஆறா­வது வருடம் 50வீதத்தை மிஞ்­சாத வகையில் கூடு­த­லாக அற­வீடு கட்ட மீளாய்வு செய்­யப்­படும். குறிப்­பாக வர்த்­தக நட­வ­டிக்­கைக்­காக வழங்­கப்­படும் காணிகளுக்கு இது பொருந்தும்.
குத்­தகை காலம் முடி­வ­டை­ய­ முதல் குத்­தகை அற­வீடு கட்­டப்­படல் வேண்டும்.இல்­லையேல் 10வீதம் தண்டபணம் மேல­தி­க­மாக அற­வி­டப்­படும்.அடுத்த 3 மாதத்­திற்கு மேல் குத்­தகை அற­வீடு கட்­டா­த­வ­ருக்கு உதா­ர­ண­மாக மாசி மாதம் குத்­தகை கட்­டப்­படும் இறு­தி­ நா­ளானால் வைகா­சிக்கு முன் அவர் குத்­தகை கட்­டா­விட்டால் வைகா­சிக்குப் பின் 10வீதம் மேல­திக தண்­டப்­பணம் சேர்த்து அற­வி­டப்­படல் வேண்டும்.
இருப்­பினும் பிர­தேச செய­லாளர் குத்­தகைக்­கா­ர­ருக்கு குத்­தகை அற­வீடு பற்றி ஒவ்­வொரு வரு­டமும் குத்தகை அற­வி­டப்­படும் இறுதி நாளுக்கு முன்­னமே அது பற்­றிய தகவல் அடங்­கிய கடி­தத்தை அனுப்ப வேண்டும்.இது பற்றி காணி ஆணை­யா­ளரின் சுற்று நிரு­பம் இல. 96/05 தெளிவு­ப­டுத்­தி­யுள்­ளது.
உங்கள் சட்டப் பிரச்சனை தொடக்கம், மன உளைச்சல் ,உளவியல் வரையிலான தங்களுடைய சந்தேகங்களை எமக்கு மின்னஞ்சலுயூடாக அனுப்பி வைக்க முடியும்.
அதற்கு வழக்கறிஞரும் சமூக ஆர்வளருமான திரு சுதன் ( SuthanLaw ) தங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.

கேள்விகளை எமக்கு அனுப்பிவைக்க வேண்டய மின்னஞ்சல் முகவரி
<20 .07.2016="" br="">
newmannar@gmail.com அனுப்பும் போது "கேள்வி-பதில்" என குறிப்பிட்டு அனுப்பவும் . 

இன்றைய (24-07-2016) கேள்வி பதில் Reviewed by NEWMANNAR on July 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.