முத்தரிப்புத்துறையில் கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்- ; ஜனவரி 19 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முத்தரிப்புத்துறை பகுதியில் கடற்படை சிப்பாய்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று (8) ஒத்திவைத்துள்ளார்.
-குறித்த வழக்கு விசாரனை இன்று இன்று வியாழக்கிழமை (8) மன்னார் நீதிமன்றில் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விசாரனைகளுக்காக எடுத்தக்கொள்ளப்பட்ட போதே குறித்த வழக்கு விசாரனையை எதிர்வரும் ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீனவ கிராமமான முத்தரிப்புத்துறை கிராமத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி இரவு அப்பகுதியில் உள்ள வீட்டினுள் செல்ல முற்பட்ட நபரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது குறித்த நபர் அருகில் உள்ள பற்றையில் மறைந்திருந்த நிலையில் குறித்த கிராம மக்கள் பிடித்து தாக்கியுள்ளனர்.
இதன் போது குறித்த நபரை காப்பாற்ற முயற்சித்த பிரிதொரு நபரும் மக்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
-மக்களின் தாக்குதல்களுக்கு உள்ளான இருவரும் கடற்படை சிப்பாயி என தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் தப்பிச் செல்ல மற்றையவரை மக்கள் பிடித்துவைத்தனர்.
பின்னர் குறித்த நபரை மக்கள் சிலாபத்துறை பொலிஸாரிடம் கையளித்தனர்.
இந்த நிலையில் கடற்படைச் சிப்பாய்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டில் குறித்த முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த 11 பேரூக்கு எதிராக சிலாபத்துறை பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
-இந்த நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த கிராம மக்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு தொடர்ச்சியாக மன்றில் விசாரனை இடம்பெற்று வந்தது.
-இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(8) மீண்டும் குறித்த வழக்கு விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
-இதன் போது கடற்படை சிப்பாய்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான குறித்த வழக்கு விசாரணையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றுமாறு கடற்படை சிப்பாயிகள் சார்பாக மன்றில் ஆஜரான எதிர்த்தரப்பு சட்டத்தரணியினால் இன்றைய தினம் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
எனினும் சந்தேக நபர்கள் சார்பாக மன்னார் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எஸ்.பிறிமூஸ் சிறாய்வா, எஸ்.ஜெபநேசன் லோகு ஆகியோரால் குறித்த வழக்கு விசாரணையை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றுவதற்கு மன்றில் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ குறித்த வழக்கு விசாரனையை எதிர்வரும் ஜனவரி மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
-மன்னார் நிருபர்-
(8-12-2016)
முத்தரிப்புத்துறையில் கடற்படை சிப்பாயிகள் மீது தாக்குதல்- ; ஜனவரி 19 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 08, 2016
Rating:
No comments:
Post a Comment