'வர்தா' புயல் நிலை கொண்டுள்ளமையினால் மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை - Photos
வர்தா புயல் நிலை கொண்டுள்ளமையினால் வடக்கு,கிழக்கு கடற்பரப்பில் இன்று(12) திங்கட்கிழமை மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் இன்றைய (12) தினம் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.
வர்தா புயல் தற்போதைய நிலையில் இலங்கையின் வட கிழக்கின் காங்கேசந்துரையில் இருந்து சுமார் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும்,இன்று(12) அல்லது நாளை (13) இந்தியாவின் சென்னை பிரதேசத்தின் கரையைக் கடக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆழ் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இன்றைய(12) தினம் தொழிலுக்குச் செல்லவில்லை.கடல் மட்டம் அதிகதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மன்னார் கடலில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.கடல் சீராக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
'வர்தா' புயல் நிலை கொண்டுள்ளமையினால் மன்னார் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை - Photos
Reviewed by NEWMANNAR
on
December 12, 2016
Rating:
No comments:
Post a Comment