அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையின் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூறும் வகையில் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம்இன்று திங்கட்கிழமை காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெறவுள்ளது.

வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் ஏ.தேவதாஸ் தலைமையிலும்,வடமாகாண சபை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசாவின் அனுசரனையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இடம் பெறவுள்ளது.

வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 30-1-1985 ஆம் ஆண்டு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அமரர் வி.சுந்தர மூர்த்தி மற்றும் ஆசிரியர்களான ரி.மகேந்திரன்,மற்றும் எஸ்.இரட்ணதுரை ஆகியோர் பாடசாலை வளாகத்தினுள் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த படுகொலைகளை நினைவு கூறும் வகையில் இடம் பெறவுள்ள '32 ஆவது' ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை திங்கட்கிழமை காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெறவுள்ளது.

குறித்த நினைவேந்தல் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு அதிதிகலாக அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண பையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா,வடமாகாண மீன் பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசா தெரிவித்தார்
மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையின் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம் Reviewed by NEWMANNAR on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.