அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தந்தை,மகன் ஆகிய இருவரும் சடலமாக மீட்பு-(PHOTOS

மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் 'குள்ளா' என அழைக்கப்படும் படகு ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில் குறித்த இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் சௌத்பார் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான ஜெஸ்மன் (வயது-49) என்பவர் தனது இளைய மகனான ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மீன் பிடிப்பதற்காக 'குள்ளா' என அழைக்கப்படும் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார்.

எனினும் குறித்த இருவரும் அன்றைய தினம் இரவே வீடு திரும்பாத நிலையில் மூத்த மகன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடற்கரை பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார்.

இதன் போது தனது தந்தை மற்றும் தம்பி இருவரும் மீன் பிடிக்கச் சென்ற படகு கடலில் மூழ்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளான நிலையில் அயலவர்களிடம் குறித்த சம்பவத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் உறவினர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் கடற்படையினர் மற்றும் கிராம மீனவர்கள் இணைந்து கடலில் தேடுதல்களை மேற்கொண்டனர்.

இதன் போது ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) என்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

எனினும் தந்iதையான ஜெஸ்மன் (வயது-49) என்பவரை கடற்படை மற்றும் சக மீனவர்கள் இணைந்து நீண்ட நேரம் தேடிய நிலையில் அவரும் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சடலம் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட ஜெ.ஜெக்ஸ்சன் (வயது-9) என்ற சிறுவன் மன்னார் சாந்திபுரம் ம.வி பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்று வந்ததாக தெரிய வருகின்றது.

இதே வேளை சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை செல்ல வேண்டிய பல சிறுவர்கள் பெற்றோர்களுடனும், உறவினர்களுடனும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


மன்னார் நிருபர்-









(29-1-2017)
மன்னார் சௌத்பார் கிராமத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற தந்தை,மகன் ஆகிய இருவரும் சடலமாக மீட்பு-(PHOTOS Reviewed by NEWMANNAR on January 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.