மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 வீரர்கள் பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளனர்.....
பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் இடம் பெறவுள்ள 4 ஆம் 'ரோல் போல்' (ROLL BALL) உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளுவதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து நான்கு வீரர்கள் பங்களாதேசிற்கு பயணமாகவுள்ளனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பங்களாதேசின் தலைநகரான டாக்காவில் 4 ஆவது தடவையாக இடம் பெறவுள்ள குறித்த 'ரோல் போல்' (ROLL BALL) உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக 3 யுவதிகளும்,ஒரு இளைஞனும் வீரர்களாக செல்லவுள்ளனர்.
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி யோ.திவ்வியா , மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் எஸ்.அருண், மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஏ.திவ்வியா , மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி எஸ்.அன்ரலின் ஆகிய வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 24 ஆம் திகதி வரை பங்களாதேசின் தலை நகரான டாக்காவில் 4 ஆவது தடவையாக இடம் பெறவுள்ள குறித்த 'ரோல் போல்' (ROLL BALL) உலகக்கிண்ணப் போட்டியில் கலந்து கொள்வதற்காக பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
56 நாடுகளுடன் இவ் போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் இலங்கை அணியினர் எதிர்வரும் 16ந் திகதி இலங்கையிலிருந்து புறப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் விளையாட்டுப் போடடியானது இலங்கை தேசியமட்டத்தில் நடைபெற்றபோது மன்னார் மாவட்டத்திலிருந்து இவ் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள் அணியினர் தேசியமட்ட ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 வீரர்கள் பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளனர்.....
Reviewed by Author
on
February 11, 2017
Rating:
No comments:
Post a Comment