மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இருவர் கைது.-Photos
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை சந்தி பகுதியில் வைத்து சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை இன்று (11) சனிக்கிழம அதிகாலை மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து தென் பதிக்கு கொண்டு செல்லும் வகையில் ஹயஸ் ரக வாகனத்தில் பதுக்கி கொண்டு செல்லப்பட்ட சுமார் 110 கிலோ கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் தலைமன்னாரில் இருந்துமன்னார் நோக்கி வந்த ஹயஸ் ரக வாகனத்தை 2 ஆம் கட்டை பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடை மறித்து சோதனை செய்தனர்.
இதன் போது சுமார் ஒரு கோடி 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 110 கிலோ கிராம் எடை கொண்ட கேரளக்கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அனுராதபுரம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமன்னாரில் இருந்து தென் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்ட கேரளக்கஞ்சாப்பொதிகலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் இருவர் கைது.-Photos
Reviewed by NEWMANNAR
on
February 11, 2017
Rating:
No comments:
Post a Comment