அண்மைய செய்திகள்

recent
-

செல்வம் எம்.பியின் முயற்சியினால் மன்னார் எமில் நகர் பகுதியில் 59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி வெகு விரைவில் ஆரம்பம்.(படம்)

மன்னார் எமில் நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ள நிலையில் சுமார் 59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் சில தினங்கள் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் துரித முயற்சியின் காரணமாக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் கீழ் குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.

குறித்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் பட்சத்தில் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் தமது பயிற்சிகளை எவ்வித தடைகள் இன்றியும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

பெரும் சிரமத்தின் மத்தியில் குறித்த மைதானத்தை அமைப்பதற்கு 59 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுத்தர காரணமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு சென்.ஜோசப் விளையாட்டுக்கழக வீரர்கள் மற்றும் கிராம மக்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-


செல்வம் எம்.பியின் முயற்சியினால் மன்னார் எமில் நகர் பகுதியில் 59 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி வெகு விரைவில் ஆரம்பம்.(படம்) Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.