அண்மைய செய்திகள்

recent
-

பிலிப்பைன்ஸில் பயங்கரம்: மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்


பிலிப்பைன்ஸ் நாட்டில் மர்ம நபரால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நந்தகுமாரன் குமாரசாமி(55) என்பவர் தமிழர் மட்டுமின்றி கனேடிய குடியுரிமையும் பெற்றவர் ஆவர்.

சில தினங்களுக்கு முன்னர் நந்தகுமாரன் தனது 24 வயதான மனைவி ஐரின்னுடன் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.

கடந்த திங்கள் கிழமை அன்று PHO-894 என்ற பதிவு எண்ணுடைய Suzuki APV காரில் தனது மனைவியுடன் காரில் பயணம் செய்துள்ளார்.

EDSA நெடுஞ்சாலையில் பயணித்த அந்தக் கார் Pasay என்ற நகருக்கு வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் நந்தகுமாரன் சிக்கியுள்ளார்.

அப்போது, திடீரென ஓட்டுனர் இருக்கையை நோக்கி வந்த மர்ம நபர் ஒருவர் நந்தகுமாரனை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் நந்தகுமாரனை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே நந்தகுமாரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நந்தகுமாரனை சுட்டது யார்? என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்தது என்ற தகவலை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.

பட்டப்பகலில் பிலிப்பைன்ஸ் நாட்டில் நந்தகுமாரன் என்ற தமிழர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிலிப்பைன்ஸில் பயங்கரம்: மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர் Reviewed by Author on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.