மன்னாரில் எதிர் வரும் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணி.
மன்னாரில் எதிர் வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணி இடம் பெறவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர், மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளால் நடாத்தப்படும் குறித்த பேரணியானது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில்கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெறவேண்டும், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம் என்று வலியுறுத்த கோரி குறித்த கவனயீர்ப்பு பேரணியானது முன்னெடுக்கப்படவுள்ளது.
-எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி வரை குறித்த பேரணி இடம் பெறவுள்ளது.
-மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று,மன்னார் மாவட்டச் செயலகத்தை சென்றடையும்.
-பின்னார் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவிற்கு வழங்கப்பட வேண்டிய மகஜர் கையளிக்கப்படவுள்ளது.
எனவே எமது உறவுகளுக்காக முன்னெடுக்கப்படுகின்ற இப்பேரணிக்கு மன்னார் வாழ் மக்களினது பூரணமான ஆதரவையும், ஒத்துழைப்பையும் கேட்டு நிற்கின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் காலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டுக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மன்னாரில் எதிர் வரும் திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தினால் கவனயீர்ப்புப் பேரணி.
Reviewed by NEWMANNAR
on
March 10, 2017
Rating:
No comments:
Post a Comment