அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு –(படம்)

மன்னாரில் வடமாகாண சபை உறுப்பினரும் மாகாண சபை பிரதம எதிர்க்கட்சி கொறடாவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் அவர்களினால் தேவையுடையோருக்கான துவிச்சக்கர வண்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(10) வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தாராபுரம், எருக்கலம்பிட்டி, சாந்திபுரம், பெரியகுஞ்சிக்குளம் ,தாழ்வுபாடு, பெரிய பண்டிவிரிச்சான் , கரிசல் போன்ற கிராமங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு குறித்த துவிச்சக்கர வண்டிகள் வைபவ ரீதியாக அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி பணிப்பாளர் என்.எம்.முனவ்வர், அமைச்சரின் இணைப்பாளர் எம். முஜாஹிர் மற்றும் அன்வர் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்க குறித்த துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.





மன்னாரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு –(படம்) Reviewed by NEWMANNAR on March 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.