அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லா பட்டதாரிகளின் போராட்டத்தில் குதிப்பு-(படங்கள் )

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரில் கனவயீர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் குறித்த கவனவயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் மாவட்டச் செயலகத்தை னெ;றடைந்தது.

-இதன் போது பேரணியில் கலந்து நூற்றிற்கும் மேற்பட்ட கொண்ட பட்டதாரிகள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டனர்.

-பின்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை கோசங்கலாக வெளிப்படுத்தினர்.

-பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

-பின்னர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் பட்டதாரிகள் கதமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்தனர்.பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் 350 ற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டப்படிப்பை நிறைவு செய்த நிலையில் வேலைவாய்ப்பு இல்லாம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.









மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலை இல்லா பட்டதாரிகளின் போராட்டத்தில் குதிப்பு-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.