அண்மைய செய்திகள்

recent
-

60 கோடி பங்களாவில் வசிக்கும் பேய்....


அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அரசாங்கம் சார்பில் முதல்வர் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள பங்களாவில் பேய் நடமாட்டம் இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து, தற்போது அந்த பங்களா மாநில விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு 60 கோடி செலவில் இந்த பங்களா கட்டப்பட்டது. Dorjee Khandu முதல்வராக இருந்தபோது இந்த பங்காள கட்டப்பட்டது. இதில் வசித்த முதல் முதல்வர் இவராவார்.

இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு விமான விபத்தில் இறந்துபோனார். இவருக்கு அடுத்தபடியாக, முதல்வராக இருந்த Jarbom Gamlin உடல்நலக்குறைவு காரணமாக இறந்துபோனார்.

மேலும், பொறுப்பு முதல்வராக இருந்த Kalikho Pul என்பவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதன்பின்னர், அந்த பங்களாவில் பணியாற்றிய அரசு ஊழியரும் அங்கிருந்த ஒரு அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்படி, நடந்து வந்த தொடர் மரணங்கள் காரணமாக அங்கு பேய் உலாவுவதாக கருத்து நிலவி வந்தது. இதனால் முதல்வர்கள் அங்க தங்க மறுத்துள்ளனர்.

இதனையடுத்து, அந்த பங்களாவை தற்போது விருந்தினர் மாளிகையாக மாற்றப்பட்டுள்ளது.

60 கோடி பங்களாவில் வசிக்கும் பேய்.... Reviewed by Author on April 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.