அண்மைய செய்திகள்

recent
-

வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள் :ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

வில்பத்து வனப்பகுதிக்கு வடக்குதிசையில் அமைந்துள்ள 04 வனப் பிரதேசங்களையும் வில்பத்து வனத்துடன் இணைத்துபாதுகாக்கப்பட்டவனப் பிரதேசமாகபெயரிடும் வர்த்தமானி கடந்தவாரம் ஜனாதிபதினால் கையெழுத்திடப்பட்டது.



இந்தவர்த்தமானியின் மூலம் தற்போதுமக்கள் வாழ்ந்துவரும் கிராமங்கள்,காணிகள்,வீடுகள் மற்றும் இஸ்லாமியபுனித ஸ்தலங்கள் என்பன அரசிற்கும் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கும் கையகப்படுத்தப்பட்டுள்ளது என தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கங்களுடன் சிலர் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ள காணிகளுக்குஅண்மித்ததாக காணப்படும் வனப் பகுதியினதும் பிரதேசமக்களினதும் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இந்தவனப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பெயரிடப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையினால் குறிப்பிட்டபிரதேசங்களில் தற்போது வாழ்ந்துவரும் மற்றும் மக்களுக்கு சட்டபூர்வமான உரிமை காணப்படும் கிராமங்கள், காணிகள், வீடுகள் மற்றும் இஸ்லாமியவணக்க ஸ்தலங்கள் ஆகிய எதுவுமே இந்த வர்த்தமானியின் ஊடாக அரசிற்கு கையகப்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


வில்பத்து வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் பொய் பிரசாரங்கள் :ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை Reviewed by NEWMANNAR on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.