உலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்......
மின்மோட்டாரில் இயங்கும் உலகின் முதல் பறக்கும் டாக்சி வாகனம் ஜேர்மனியில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியை சேர்ந்த லில்லியம் என்னும் நிறுவனம் மின்மோட்டரில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்துள்ளது.
இந்த வாகனத்தின் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், இருந்த இடத்திலிருந்து மேலே எழும்பி பறக்கவும், தரை இறங்கவும் இதில் முடியும்.
இந்த பறக்கும் வாகனம் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது, இதில் இரண்டு பேர் பயணம் செய்யலாம்.
மின்சாரத்தில் இந்த வாகனம் இயங்குவதால் குறைவான எரிபொருள் செலவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இது உள்ளது.
இந்த பறக்கும் வாகனத்தின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்யும் பட்சத்தில் 300 கிலோ மீட்டர் வரை பயணிக்க முடியும்.
மிகவும் பாதுகாப்பான அம்சங்களுடன் தயாராகியுள்ள இந்த பறக்கும் டாக்சி வாகனம் மக்களின் பயண பயன்பாட்டுக்கு விரைவில் வரவுள்ளது.
இது நடைபெறும் பட்சத்தில் போக்குவரத்தில் மிகப்பெரிய புரட்சி உண்டாகும் என நம்பப்படுகிறது.
உலகின் முதல் பறக்கும் டாக்சி தயார்......
Reviewed by Author
on
April 24, 2017
Rating:
No comments:
Post a Comment