முள்ளிக்குளம் கிராம மக்களின் போராட்டத்துடன் இணைந்து கொண்டு ஆதரவு வழங்கிய தமிழீழ விடுதலை இயக்கம்.(படம்)
தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளிறேற்றி தம்மை மீள் குடியேற்றம் செய்யக்கோரி முசலி பிரதேச்ச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் 12 ஆவது நாளகவும் இன்று திங்கட்கிழமை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொரிவித்து தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இன்று திங்கட்கிழமை காலை முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிஙகம்,டெலோ மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ உற்பட பலர் கலந்து கொண்டு முள்ளிக்குளம் மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
-கடந்த 12 தினங்களாக மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு விருகின்ற போது அதிகாரிகள் எவரும் வருகை தந்து உரிய பதிலை வழங்கவில்லை என அந்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-தொடர்ச்சியாக பல்வேறு கிராம மக்கள் நேரடியாக சென்று ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் இன்று திங்கட்கிழமை வங்காலை கிராம மக்கள் அங்கு சென்று ஆதரவு வழங்கியுள்ளனர்.
-போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் உணவை சமைத்து உண்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிக்குளம் கிராம மக்களின் போராட்டத்துடன் இணைந்து கொண்டு ஆதரவு வழங்கிய தமிழீழ விடுதலை இயக்கம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:
No comments:
Post a Comment