அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன் அழைப்பு

வடக்கு கிழக்கில் நாளை வியாழக்கிழமை(27) அனுஸ்ரிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வட கிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் முஸ்ஸீம் மக்கள் தமது பல்வேறு உரிமைகளுக்காக தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

-குறிப்பாக தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வேண்டியும், அரசியல் கைதிகளின் துரித விடுதலைக்காகவும்,நீதியான போர்க்குற்ற விசாரனைக்காகவும், வேளையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ச்சியாக பல மாதங்களாக மக்கள் போராட்டங்கள் வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருகின்றது.

-குறிப்பாக மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களில் மீள் குடியேற்றம் செய்யக்கோரி கடந்த 34 நாற்களுக்கும் மேலாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

-வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் பல வழிகளிலும் தமது உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அந்த மக்களின் போராட்டங்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் பிரதி நிதி என்ற வகையில் நான் மதிப்பளித்து ஆதரவளிக்கின்றேன்.

எனவே நாளை(26) வியாழக்கிழமை அனுஸ்ரிக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு மன்னார் மாவட்ட மக்களும் வர்த்தக சமூகத்தினரும் இணைந்து போராட்டத்தை வழுப்படுத்த ஒன்று திறண்டு ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் கோரிக்கை விடுத்தார்.
மன்னாரில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன் அழைப்பு Reviewed by NEWMANNAR on April 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.