அண்மைய செய்திகள்

recent
-

மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம்! தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு...


அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வு கூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வு கூறியுள்ளார்.

அவரது எதிர்வு கூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எதிர்வு கூறலை நிஜமாக்கும் வகையில், டொனால்ட் டிரம்ப் அண்மையில் சிரிய ஹொம்ஸ் நகரிலுள்ள விமானப் படைத்தளத்தின் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிரியா மீதான தாக்குதலே ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனாவை அதிக உயிர்களை பலிகொள்ளக் கூடிய உலகப் போர் ஒன்றுக்குள் தள்ளும் என ஹொராசியோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது தூய பாத்திமா அன்னை காட்சியளித்த 100 ஆவது ஆண்டு காலத்தில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என எதிர்வுகூறியுள்ளார்.

அந்த வகையில் மூன்றாம் உலகப் போரானது எதிர்வரும் மே 13ம் திகதிக்கும் ஒக்டோபர் 13ம் திகதிக்கும் இடையில் இடம்பெறும் எனவும் இதன்போது பாரிய பேரழிவு மற்றும் மரணங்கள் இடம்பெறும் எனவும் ஹொராசியா தெரிவித்துள்ளார்.


மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம்! தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு... Reviewed by Author on April 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.