அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் எமில்நகரில் நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு...

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச்சேர்ந்த எமில்நகர் பகுதியில் புனித சூசையப்பர் விளையாட்டு கழகத்தின் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 28-05-2017 ஞாயிறு காலை 9:00 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வுகளை பனங்கட்டுகொட்டு அபிவிருத்திக்குழுவினர் முன்னெடுத்தனர்.

இவ்நிகழ்விற்கு....
 பிரதம விருந்தினராக புனித செபஸ்தியார் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை பெப்பி சோசை அடிகளாரும்,
கெளரவ விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் வன்னி இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும்,
வடமாகாணசபை உறுப்பினர் ஏ.எஸ்.பிரிமூஸ் சிறைவா அவர்களும், மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.இ.ரெனால்ட் மற்றும் எமில்நகர் பகுதிக்கான கிராம சேவகர், I.இம்மானுவேல் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த நவீன வசதிகளோடான விளையாட்டு மைதானத்திற்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 44 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதற்கான அடிக்கல்லை கலந்துகொண்ட விருந்தினர்கள் உத்தியோகபூர்வமாக நாட்டிவைத்தனர்.
நிகழ்வைதொடர்ந்து சிநேகபூர்வ கடினப்பந்து கிரிக்கட் போட்டியும் இடம்பெற்றது குறித்த போட்டியில் அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு துடுப்பாடியது குறிப்பிடத்தக்கது.
 மிகவிரைவில் அபிவிருத்திப்பணிகள் நடைபெற்று முழுமையான மைதானமாக கிடைத்தால் மகிழ்ச்சியான விடையமே.
 











மன்னார் எமில்நகரில் நவீன வசதிகளுடனான விளையாட்டரங்கிற்கு அடிக்கல்நாட்டும் நிகழ்வு... Reviewed by Author on May 30, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.