அண்மைய செய்திகள்

recent
-

முல்லை. புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் வாகனம் விபத்து; சாரதி பரிதாப மரணம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து கொழும்பிற்கு கடமை நிமிர்த்தமாக பிக்கப் வாகனத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலக புள்ளிவிபரவியலாளர் துரைசிங்கம் ஸ்ரீகரன் பயணித்த வாகனமும் பாரவூர்தியும் நேரெதிராக மோதிக் கொண்ட விபத்துச் சம்பவத்தில் பிக்கப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், ஸ்ரீகரனும் அவ ருடன் பயணித்த அவரது இரண்டு சிறு பிள்ளைகளும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை கொழும்பு - புத்தளம் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,


கொழும்பில் நடைபெறவுள்ள கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புள்ளிவிபரப் பிரிவில் கடமையாற்றும் புள்ளிவிபரவியலாளர் துரைசிங்கம் ஸ்ரீகரன் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து புத்தளம் வீதி ஊடாக கொழும்பிற்கு மாவட்ட செயலக பிக்கப் வாகனத்தில் தனது இரண்டு பிள்ளைகளுடன் பயணித்துள்ளார்.

பயணத்தின் போது பிக்கப் வாகனம் புத்தளத்தை அண்மித்துக் கொண்டிருந்த வேளையில், எதிரில் வந்த பாரவூர்தியும் பிக்கப் வாகனமும் நேரெதிராக மோதி விபத்துக்குள்ளானதில் பிக்கப் வாகனத்தின் சாரதியான முள்ளியவளைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா - ராஜராஜன் (வயது 41) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புள்ளிவிபரவியலாளராகக் கடமையாற்றும் செல்வராசா - ஸ்ரீகரன் (வயது 46) மற்றும் அவருடன் பயணித்த அவரது இரண்டு சிறு பிள்ளைகளும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு புத்தளம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக ஸ்ரீகரன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் பிக்கப் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது. விபத்து தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லை. புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் வாகனம் விபத்து; சாரதி பரிதாப மரணம் Reviewed by NEWMANNAR on May 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.