அண்மைய செய்திகள்

recent
-

திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு....


கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.

நற்பிட்டிமுனை பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த புவனேந்திரன் கீர்த்தனா (16 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையில் க.பொ.த சாதாரண தரத்தில் (தரம் – 11) கல்வி பயிலும் குறித்த மாணவி, இம்முறை பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


க.பொ.த சாதாரண தரத்தில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பிரத்தியோக மேலதிக வகுப்புக்கள் பாடசாலையில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மேலதிக வகுப்பு இடம்பெற்ற நிலையில், இவ்வகுப்பு முடிவடைந்து 2.20 மணியளவில் மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துள்ளனர்.

இதன் போது குறித்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து குறித்த மாணவி கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்றைய தினம் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.

திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு.... Reviewed by Author on May 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.