முதிரைமரக்குற்றிகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
வவுனியா ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் முதிரைமரக்குற்றிகளை கடத்திச் சென்ற இருவரை பொலிஸார் இன்று(04) கைது செய்துள்ளனர்.
ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பார ஊர்தியின் மூலம் முதிரைமரக் குற்றிகள் கடத்திச்செல்லப்பட்டுள்ளன.
இதன் போது சந்தேகம் கொண்ட பொலிஸார் பார ஊர்தியை சோதனையிட்ட போது மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 25 முதிரை மரக்குற்றிகள் இருப்பதை கண்டனர்.
இதனையடுத்து பார ஊர்தியில் இருந்த இருவரை ஈச்சங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதிரைமரக்குற்றிகளை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது
Reviewed by Author
on
May 06, 2017
Rating:
No comments:
Post a Comment