கண்டுபிடிக்கப்பட்டன வேற்றுக்கிரக உடல்கள் : வெளிவந்தது புதிய ஆதாரம்!
நாம் வாழும் பிரபஞ்சத்தில் பூமியைத் தவிர மனிதர்கள் வாழத்தகுந்த, நீர்நிலைகளையும் கொண்ட புதிய 10 கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அண்மையில் அறிக்கை விடுத்தது.
இதன் மூலம் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன.
அதனைத் தொடர்ந்து பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்ந்தமைக்கான நம்பத்தகுந்த ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆரம்பகாலத்தில் பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகளின் வருகை காணப்பட்டு வந்ததாக ஆய்வாளர்கள் உறுதியாக தெரிவித்து வந்தனர்.
என்றாலும் கூட அதனை நிரூபிப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் தேவைப்பட்டன. அதன்படி பூமி முழுவதும் சிதறிக் கிடக்கும் ஆதாரங்களை ஆய்வாளர்கள் திரட்டிக் கொண்டே வந்தனர்.
இவற்றில் தென்அமெரிக்காவில் காணப்படும் பெரு நாட்டில் உள்ள நாஸ்கா கோடுகள் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். இங்கு காணப்படும் சித்திரங்களும், தளங்களும் மனித நாகரீகம் தோற்றம் பெறுவதற்கு முன்னர் அதி உயர் தொழில்நுட்பம் கொண்டு அமைக்கப்பட்டவை.
அத்தோடு பூமிக்கு சொந்தமில்லாத தாதுக்களின் துகள்களும் இங்கு கண்டு பிடிக்கப்பட்டன. தொடர்ந்தும் இங்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் நேற்றைய தினம் இங்கு வேற்றுக்கிரகவாசிகளின் மம்மிகள் (பதப்படுத்தப்பட்ட உடல்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த உடல்கள் மனிதர்களைப்போன்று இல்லாது வித்தியாசமான எலும்பு அமைப்புகளைக் கொண்டு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மம்மிகள் மனித நாகரீகம் வளர்ச்சியடையாத காலகட்டத்திற்கு முன்னரான காலத்திற்கு உரியவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேற்றுக்கிரகவாசிகள் அமைத்ததாக கூறப்பட்ட நாஸ்கா தளத்தில் இவ்வாறு மம்மிகள் கண்டு பிடிக்கப்பட்டமை வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக இது வரைக்காலமும் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை ஏற்றுக்கொள்ளாத பல ஆய்வாளர்களும் இப்போது கிடைக்கப்பெற்ற ஆதாரத்தினை வியப்பாக நோக்குகின்றனர்.
இந்த நிலையில் பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் ஓர் கலாச்சாரமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுடைய தேவைகள் முடிந்த பின்னர் திரும்பிச் சென்று இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
நாசாவின் அறிக்கையைத் தொடர்ந்து இவ்வாறான பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் அண்மைக்காலமாக வேற்றுக்கிரகவாசிகள் குறித்து அதிகமாக செய்திகள் வெளிவருகின்றமையும், அவர்கள் மனிதர்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்கின்றனர் எனவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
கண்டுபிடிக்கப்பட்டன வேற்றுக்கிரக உடல்கள் : வெளிவந்தது புதிய ஆதாரம்!
Reviewed by Author
on
June 22, 2017
Rating:
No comments:
Post a Comment