அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினால் இன்று சனிக்கிழமை(10) காலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

--மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக சுற்றுச்சூழல் பகுதிகளில் அடர்ந்த பற்றைகள் வளர்ந்து காணப்படுவதோடு,நுளம்பின் உற்பத்தியும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது.

-இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிரமதானப்பணிகளை மேற்கொள்ளுமாறு வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினரிடம் கோரிக்கையினை முன் வைத்தனர்.

-இதன் போது குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினர் இன்று சனிக்கிமை காலை 10.30 மணி முதல் 1 மணிவரை சுமார் நூற்றுக்கணக்கான முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டு சிரமதானப்பணிகளை மேற்கொண்டனர்.

-இதன் போது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.ஆர்.யூட், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ,வைத்தியர், மன்னார் நகர சபையின் செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(படம்)
மன்னார் நிருபர்-
(10-06-2017)








மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தினால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிரமதானம்- Reviewed by NEWMANNAR on June 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.