அண்மைய செய்திகள்

recent
-

2 நாள்க­ளில் செல­வா­கிய ரூ. 40 மில்­லி­ய­னால் வட­மா­கா­ணத்­தில் கல்வி வளர்ச்சி ஏற்­பட்­டதா?

அதி­பர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தவ­றி­விட்­டார் அமைச்­சர் குரு­கு­ல­ராசா

‘‘நீங்­கள்­தான் குறிப்­பி­டு­கின்­றீர்­கள். சம்­பந்­தப்­பட்ட மாண­வி­யி­டம் இருந்து எந்த முறைப்­பா­டும் கிடைக்­க­வில்லை’’ எனக் கூறி­யுள்­ளார்.

சம்­பந்­தப்­பட்ட மாண­வி­யி­டம் இருந்து முறைப்­பாடு கிடைக்­க­வில்லை என்ற நிலைப்­பாட்டை அமைச்­சர் எடுத்த வேளை­யி­லும் அதி­ப­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­பட்டு அவர் 1AB பாட­சா­லை­யில் இருந்து தரம் இறக்­கப்­பட்­டுள்­ளார் என்ற அமைச்­ச­ரின் கூற்று இந்­தச்­ சம்­ப­வத்தை நிரூ­பிக்­கின்­றது.

இவ்­வாறு அந்த அதி­ப­ருக்கு எதி­ராக விசா­ரணை நடத்­தப்­பட்­டது. அவர் தரம் இறக்­கப்­பட்­டார் என்­ப­வற்­றுக்கு எது­வித ஆதா­ர­மும் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. எனி­னும் அமைச்­ச­ரின் பதி­லில் இருந்து குறித்த சம்­ப­வம் உண்மை என்­ப­தும் இது குறித்து அமைச்­சர் அறிந்­தி­ருந்­தார் என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது.

கல்­வித் துறை­யையே தலை குனி­ய­வைக்­கும் செயல்
மூடி­ம­றைக்­கப்­பட்­டது

மேலும் அமைச்­ச­ரி­டம் குறித்த அதி­ப­ரு­டன் என்ன தொடர்பு எனக் கேட்­கப்­பட்ட வேளை­யில் தாம் கல்­விப் பணிப்­பா­ள­ராக இருந்த வேளை­யில் அந்த அதி­பர் சேவைக்­கால ஆலோ­ச­க­ராக இருந்­தார் என்­றும் அவர் தன்­னு­டைய நண்­ப­னில்லை என்­றும் கூறி­யி­ருந்­தார். எனி­னும் இந்­தச்­ சம்­ப­வத்தை நன்கு அறிந்­தி­ருந்­தும் குறித்த அதி­ப­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளரை அல்­லது செய­லா­ளரை கேட்க அமைச்­சர் தவ­றி­யுள்­ளார்.

கல்­வித்­து­றை­யையே தலை குனிய வைக்­கும் இந்­தச் செயல், கல்வி அமைச்­சர் உட்­பட கல்வி அதி­கா­ரி­க­ளால் மூடி­ம­றைக்­கப்­பட்­டுள்ளதை நாம் காண்­கின்­றோம். இது ஓர் தவ­றான செய­லா­கும். குறித்த அதி­பர் மாண­வி­யின் மீது புரிந்த பாலி­யல் வன்­முறை நட­வ­டிக்­கை­யா­னது ஓர் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­யாக அமை­கின்­றது.

இந்­தச்­ சம்­ப­வத்தை மூடி மறைப்­ப­தில் அமைச்­ச­ருக்கு பங்கு இருந்­துள்­ளது என்­பது நிரூ­ப­ண­மா­கின்­றது. எனவே இது ஓர் அதி­கார முறை­கேடு என்ற முடி­வுக்கு ­விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

ஆசி­ரி­யர் மீதான பழி­வாங்­கல் ; முதல்­வர் விசா­ரிக்­க­வேண்­டும்

3.5 ஆ) குறித்த அதி­பர் பாட­சாலை மாண­வி­யு­டன் தகாத முறை­யில் நடந்­து­கொள்ள முயன்ற விட­யத்தை பாட­சாலை வகுப்­பா­சி­ரி­யர் வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர் முரு­க­வே­ளுக்­குக் கடி­தம் மூலம் முறைப்­பாடு செய்­தார். அதற்­காக அந்த ஆசி­ரி­யர் பழி­வாங்­கப்­பட்டு வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் முரு­க­வே­ளால் இட­மாற்­றம் செய்­யப்­பட்­டமை.

இந்த ­விட­யம் குறித்து எது­வித நேரடி சாட்­சி­ய­மும் விசா­ர­ணைக் குழு­வி­டம் முன்­வைக்­கப்­ப­ட­ வில்லை. எனி­னும் கல்வி­ அமைச்­ச­ரி­டம் இது குறித்து கேட்­கப்­பட்ட வேளை­யில், “குறித்த ஆசி­ரி­யர் தமது விருப்­பப்­படி இட­மாற்­றம் பெற்­றுச் சென்­ற­தா­க­வும் இந்த ­முறைப்­பாடு தமக்கு வர­வில்லை என்­றும் வந்­தி­ருந்­தால் நட­வ­டிக்கை எடுத்­திருப்­பேன்” என்­றும் கூறி­யி­ருந்­தார்.

சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­யின் சாட்­சி­யம் எம் முன் நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யால் இந்­தக்­ குற்­றச்­சாட்டை விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின்றது. அதே­வே­ளை­யில் இந்­தக்­ குற்­றச்­சாட்டு தொடர்­பில் முறை­யான விசா­ரணை ஒன்றை நடத்­து­மாறு கல்வி­ அதி­கா­ரி­க­ளைப் பணிக்­கு­மாறு முத­ல­மைச்­சரை இந்த ­விசா­ர­ணைக்­குழு கேட்­டுக்­கொள்­கின்­றது.

கல்­விப் பணிப்­பா­ள­ரின் நடத்தை தொடர்­பில் விசா­ரணை அவ­சி­யம்

3.5) குறித்த ஆசி­ரி­ய­ரின் கடித மூல­மான முறைப்­பாட்டை விசா­ரிக்­கச் சென்ற வல­யக்­கல்­விப் பணிப்­பா­ளர், அந்த ஆசி­ரி­யரை ஏனைய ஆசி­ரி­யர்­கள் முன்­னி­லை­யில் கொச்­சைப்­ப­டுத்­தி­யமை தொடர்­பாக அனந்தி சசி­த­ரன், கல்வி அமைச்­ச­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தும் வல­யக்­ கல்­விப் பணிப்­பா­ள­ருக்கு எதி­ராக எது­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­காமை.

இது தொடர்­பில் விசா­ர­ணைக் குழு­வி­டம் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டில் குறித்த கல்­விப் பணிப்­பா­ளர் விசா­ர­ணைக்கு என்று சென்ற வேளை­யில், அந்த முறைப்­பாட்­டைச் செய்த வகுப்­பா­சி­ரி­யை­யி­ட­மி­ருந்து தமக்கு ஒரு காதல் கடி­தம் வந்­துள்­ளது என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­னார் என்­ப­தா­கும்.

இதி­லி­ருந்து கல்வி அமைச்­ச­ரி­டம் விசா­ர­ணைக்­ குழு விசா­ரித்த வேளை­யில், “தமக்கு எழுத்து மூல­மான அறி­வித்­தல் ஒன்­றும் இல்லை என்­றும் அனந்தி சசி­த­ரன் சொன்­னது தமக்­குத் தெரி­யாது என­வும் கூறி­யி­ருந்­தார்.

இங்கு சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யை­யின் சாட்­சி­யம் விசா­ர­ணைக் குழு முன்­னி­லை­யில் நெறிப்­ப­டுத்­தப்­ப­டா­மை­யால் இந்­தக் குற்­றச் சாட்டை இந்த விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின்­றது.

அதே­வே­ளை­யில் ஆசி­ரி­யை­யி­னால் செய்­யப்­பட்ட முறைப்­பாட்­டின் பெரிய தன்மை கார­ண­மாக வல­யக்­ கல்­விப்­ பணிப்­பா­ள­ரின் இந்த நடத்தை குறித்து ஓர் முறை­யான விசா­ரணை நடத்­து­மாறு கல்வி அதி­கா­ரி­க­ளைப் பணிக்­கு­மாறு முத­ல­மைச்­சரை இந்த விசா­ர­ணைக்­குழு கேட்­டுக் கொள்­கின்­றது.

அதி­ப­ருக்கு எதி­ராக குற்­ற­வி­யல் வழக்கு

மேலும் கிளி­நொச்சி, பாரதி பாட­சா­லை­யில் 2015ஆம் ஆண்­ட­ள­வில் மாணவி ஒரு­வ­ரு­டன் அப்­போ­தைய அதி­பர் தகாத முறை­யில் நடக்க முற்­பட்­டமை தொடர்­பி­லும் இந்த விட­யத்தை வல­யக்­ கல்­விப்­ப­ணிப்­பா­ள­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­திய ஆசி­ரியை இட­மாற்­றம் செய்­யப்­பட்­டமை குறித்­தும் குறித்த ஆசி­ரியை இந்த­ முறைப்­பாட்­டைச் செய்­த­தை­ம­யால் வல­யக்­ கல்­விப் ­பணிப்­பா­ளர் ஆகிய முரு­க­வே­ளி­னால் ஏள­னம் செய்­யப்­பட்­டமை தொடர்­பி­லும் குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் சட்­டத்­துக்கு அமைய விசா­ரணை நடத்­தப்­பட்டு உரிய நட­வ­டிக்கை அவர்­க­ளுக்கு எதி­ராக எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என­வும் இந்த விசா­ர­ணைக்­குழு கேட்­டுக் கொள்­கின்­றது.

அமைச்­ச­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்டை செய­லா­ள­ரின்
சாட்­சி­யம் நிரூ­பிக்­கின்­றது

3.6) கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தி­லும் கிளி­நொச்சி புனித திரேசா பெண்­கள் பாட­சா­லை­யி­லும் தனக்­கேற்­ற­வர்­களை அதி­ப­ராக நிய­ம­னம் செய்ய கல்வி அமைச்­சின் செய­லா­ள­ருக்கு அழுத்­தம் கொடுத்­தமை.

இந்த விட­யம் குறித்து கல்வி அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில், “கல்வி அமைச்­சில் விண்­ணப்­பம் கோரி நேர்­மு­கத்­தேர்வு நடத்­தித்­தான் நிய­ம­னம் செய்­தார்­கள் என்­றும் தாம் அதற்கு எந்­த­வித அழுத்­த­மும் கொடுக்­கவில்லை” என்­றும் கூறி­யி­ருந்­தார்.

வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் தமது சாட்­சி­யத்­தில், “2015ஆம் ஆண்டு கிட்­டத்­தட்ட 80 அதி­பர்­க­ளுக்கு தரம் 1 பத­வி­யு­யர்வு கொழும்­புக் கல்வி அமைச்­சால் வழங்­கப்­பட்­டது.

அதில் வெற்­றி­ட­மாக இருந்த பாட­சா­லை­க­ளுக்கு விண்­ணப்­பம் கோரி நேர்­மு­கப்­ப­ரீட்சை நடத்­தப்­பட்­டது. அப்­போது கிளி/ புனித திரேசா பெண்­கள் பாட­சா­லை­யில் இருந்த அதி­பர் வேறு பாட­சா­லைக்­குத் தெரிவு செய்­யப்­பட்­ட­தால் கிளி/ புனித திரேசா பெண்­கள் கல்­லூ­ரிக்கு அதி­பர் வெற்­றி­டம் ஏற்­பட்­டது. அதற்கு வலி­கா­மம் கல்வி வல­யத்­தில் சங்­கானை கோட்­டக் ­கல்வி அதி­கா­ரி­யாக இருந்த வகுப்பு 1 அதி­பரை அந்த பாட­சா­லைக்கு நிய­மிக்­கு­மாறு கல்வி அமைச்­சர் கூறி­யி­ருந்­தார்” என்று தெரி­வித்­தார்.

கல்வி அமைச்­சின் செய­லா­ள­ரின் சாட்­சி­யம் கிளி/ புனித திரேசா பெண்­கள் பாட­சாலை தொடர்­பில் அமைச்­சர் மீது கொண்­டு­வ­ரப்­பட்ட குற்­றச்­சாட்டை நிரூ­பிக்­கின்­றது. அங்கு கல்வி அமைச்­ச­ரின் அழுத்­தம் கார­ண­மா­கவே அந்த நிய­ம­னம் நடை­பெற்­றது என்ற முடி­வுக்கு இந்த விசா­ர­ணைக்­குழு வரு­கின்­றது.

கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யம் தொடர்­பில் எந்­த­வித சாட்­சி­ய­மும் எம்­முன் வைக்­கப்­ப­டாத நிலை­யில் கிளி­நொச்சி கனிஷ்ட வித்­தி­யா­ல­யம் தொடர்­பான குற்­றச்­சாட்டு நிரா­க­ரிக்­கப் படு­கின்­றது.

நிதி வீண்­வி­ர­யம் குறித்து செய­லா­ள­ரின் சாட்­சி­யம் இது

3.7) வடக்கு மாகா­ணத்­தி­லுள்ள கல்வி வல­யங்­க­ளில் ஆசி­ரி­யர் மாநாடு என்ற பெய­ரில் பெரு­ம­ள­வில் நிதி செல­வ­ழித்து வீண்­வி­ர­யம் செய்­தமை
இந்­தக் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன், “ஆசி­ரி­யர் மா­நாடு 12 வல­யங்­க­ளில் நடத்­தப்­பட்­டது.

2015ஆம் ஆண்டு PSDG நிதி­யில் ரூபா 80 மில்­லி­யன் ஒதுக்கி ஆசி­ரி­யர் மா­நாட்­டை­யும் அதி­பர் மா­நாட்­டை­யும் கட்­டா­யம் நடத்­தும்­படி கூறப்­பட்­டது. நாங்­கள் ரூபா 80 மில்­லி­ய­னை­ யும் இதற்­குப் பயன்­ப­டுத்த முடி­யாது எனக்­கூறி ரூபா 40 மில்­லி­யனை இந்­தத்­ தேவைக்­கும் மிகுதி ரூபா 40 மில்­லி­யனை ஆசி­ரி­யர்­க­ளுக்­கான தள­பா­டங்­க­ளைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கும் வழங்­கி­னோம்.

அதன்­படி ரூபா 40 மில்­லி­ய­னில் ரூபா 24 மில்­லி­யனை ரூபா 2 மில்­லி­யன்­படி 12 வலங்­க­ளுக்­கும் மிகுதி ரூபா 16 மில்­லி­யனை அதி­பர் மா­நாட்­டுக்­கும் ஒதுக்கி வழங்­கி­னோம். ஒவ்­வொரு ­வல­ய­மும் தமக்கு வழங்­கிய நிதிக்­கேற்­ற­வாறு ஒதுக்கி செலவு செய்­தார்­கள்” என்று கூறி­யி­ருந்­தார்.

மேலும் அவர் தமது சாட்­சி­யத்­தில், “நாங்­கள் ஒவ்­வொரு வல­யத்­துக்­கும் நிதி­யைக் கொடுத்து அவர்­களே விழா­வுக்­கான திட்­டங்­களை மேற்­கொண்டு செய்­தார்­கள். இந்த மாநாட்­டின் நோக்­கம் எல்லா ஆசி­ரி­யர்­க­ளும் ஒன்­று­கூடி தங்­க­ளது திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வது. அவர்­க­ளுக்­கான பாட­வி­தா­னங்­க­ளு­டன் தொடர்­பான சுற்­ற­றிக்­கை­க­ளு­ட­னான ஆய்­வு­கள் ஆக்­கங்­கள் பற்­றிய நிகழ்­வு­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­ன”­என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இவ­ரது சாட்­சி­யத்­தில் இருந்து ஆசி­ரி­யர் மாநாட்­டுக்­கென வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் ரூபா 40 மில்­லி­ய­னாக வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சால் குறைக்­கப்­பட்­டது என்­பது தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் ஆசி­ரி­யர் மாநாட்­டுக்­கென இந்த நிதி வழங்­கப்­பட்ட போதி­லும் ஒவ்­வொரு வல­யத்­துக்­கும் நிதியை வழங்­கிய பின் அவர்­களே விழா­வுக்­கான திட்­டங்­களை மேற்­கொண்டு செய்­தார்­கள் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

நிதி விர­யம் குறித்து கல்வி அமைச்­ச­ரின் சாட்­சி­யம் இது

இந்த விட­யம் சாட்­சி­ய­ம­ளித்த வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­சர், “ஆசி­ரி­யர்­கள், அதி­பர்­கள் மாநாட்­டுக்­கென நிதி ஆணைக்­கு­ழு­வால் ரூபா 40 மில்­லி­யன் வழங்­கப்­பட்­டது. எம்­மால் இந்த மாநாடு நடத்­தப்­ப­ட­வில்லை. ஒவ்­வொரு கல்வி வல­ய­மும் கையேட்­டின்­படி இதில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை நடத்­தி­னார்­கள். அவர்­க­ளின் ஆக்­கங்­க­ளைக் கொண்டு சஞ்­சி­கை­கள் வெளி­யிட்­டார்­கள்.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு உள்ள சந்­தே­கங்­கள் தொடர்­பாக ஆய்­வு­கள் நடத்­தி­னார்­கள். கல்­வி­யி­ய­லா­ளர்­க­ளைக் கொண்டு விரி­வுரை நடத்­தி­னார்­கள். ஒவ்­வொரு கல்வி வல­யத்­தி­லும் 2 நாள்­கள் இது நடை­பெற்­றது. கல்­விக் கண்­காட்­சி­கள், கலை நிகழ்ச்­சி­கள் நடத்­தப்­பட்­டன. ஆசி­ரி­யர்­க­ளின் ஆற்­றலை வெளிப்­ப­டுத்­து­கின்ற நிகழ்­வு­கள்­தான் நடை­பெற்­றன.

இது எவ்­வாறு நடத்த வேண்­டும் என நிதி ஆணைக்­குழு ஒரு பிர­மா­ணத்தை அனுப்பி இருக்­கின்­றது. அதில் இருந்து வில­கிச் செல்ல முடி­யாது. அந்த வகை­யில்­தான் ­செயற்­ப­டுத்­தப்­பட்­டன. இதன் மூலம் ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் எவ்­வாறு வகுப்­ப­றை­யில் கற்­பிக்க வேண்­டும் என்­பது பற்றி விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது” என்று கூறி­யி­ருந்­தார்.

மேலும் அமைச்­சர் தமது சாட்­சி­யத்­தில், “இந்த மாநாட்­டில் என்ன நடை­பெற்­றது என்­பதை தாம் பார்க்­க­வில்லை என்­றும் செய­லா­ளர்­கள், மாகா­ணக் கல்­விப் பணிப்­பா­ளர்­கள், கல்வி வல­யங்­க­ளில் தயா­ரிக்­கப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளைப் பார்ப்­பார்­கள் என்­றும் 12 வல­யங்­க­ளில் பதி­னை­யா­யி­ரம் ஆசி­ரி­யர்­கள் இருக்­கின்­றார்­கள் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

மேலும் அமைச்­ச­ரி­டம் ஆசி­ரி­யர்­க­ளின் திறன் விருத்­திக்­காக வழங்­கப்­பட்ட அந்த நிதியை ஒரு­நா­ளில் செலவு செய்­யா­மல் அவர்­க­ளின் கல்வி கற்­பிப்­ப­தற்­கான அறிவை வளர்ப்­ப­தற்கு பயன்­ப­டுத்­த­லாம் எனக்­கூ­றப்­பட்ட போது, அந்த நிதி இதற்­கா­க­வே­தான் வழங்­கப்­பட்­டது எனக்­ கூறி­யி­ருந்­தார்.

நிதிப் பயன்­பாட்­டில் கல்வி அமைச்­சர் பொறுப்­பற்ற செயற்­பாடு

வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்சு செய­லா­ள­ரின் சாட்­சி­யத்­தை­யும் வடக்கு ­மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரின் சாட்­சி­யத்­தை­யும் ஒப்­பிட்டு நோக்­கும் இடத்து வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரின் பொறுப்­பற்ற செயற்­பாடு மிகத் தெளி­வாக வெளிப்­ப­டு­கின்­றது.

கல்வி அமைச்­சின் செய­லா­ளர், ரூபா 80 மில்­லி­யன் வழங்­கப்­பட்டு பின் அது தங்­க­ளால் ரூபா 40 மில்­லி­ய­னா­கக் குறைக்­கப்­பட்­டது எனக்­கூ­றிய வேளை­யில், அமைச்­சர் ரூபா 40 மில்­லி­யன் மட்­டுமே தரப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

நிதி ஆணைக்­கு­ழு­வின் அறி­வு­றுத்­த­லுக்கு அமை­வா­கவே இந்த நிதி செலவு செய்­யப்­பட்­டது என்­றும் நிதி ஆணைக்­கு­ழு­வின் பிர­மா­ணத்தை மீற முடி­யாது என்­றும் கல்வி அமைச்­சர் தெரி­விக்­கும் அதே வேளை­ அ­மைச்­சின் செய­லா­ளர் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் நிதி­யில் ரூபா 40 மில்­லி­யன் வேறு தேவைக்­குப் பாவிக்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் அவ­ருக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள் ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த போதி­லும் அவர் தமது சாட்­சி­யத்­தில் குறிப்­பிட்­டுள்ள ஆவ­ணங்­கள் எத­னை­யும் விசா­ர­ணைக்­குழு முன் சமர்ப்­பிக்­க­வில்லை.

அவ்­வாறு செய்­யு­மாறு தமது அமைச்­சின் செய­லா­ள­ரை­யும் அவர் பணிக்­க­வில்லை. நிதி ஆணைக்­கு­ழு­வின் இன் அறி­வு­றுத்­த­லைச் சமர்ப்­பிக்­காது அமைச்­சர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார். மேலும் ஆசி­ரி­யர் மா­நாட்­டின் போது சஞ்­சி­கை­கள் வெளி­யி­டப்­பட்­ட­தா­கக் கூறிய போதி­லும் அவை விசா­ர­ணைக்­குழு முன் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை.

கல்வி வளர்ச்­சிக்­கென ஆசி­ரி­யர் அதி­பர் மாநாடு நடத்த நிதி ஆணைக்­கு­ழு­வால் தரப்­பட்ட ரூபா 80 மில்­லி­யன் அமைச்­ச­ரின் அறி­வுக்கு அப்­பாற்­பட்ட வகை­யில் ரூபா 40 மில்­லி­ய­னா­கச் செய­லா­ள­ரி­னால் குறைக்­கப்­பட்டு அந்­தத்­ தொகை­யும் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­டு­விட்­டது.

இரண்டு நாள்­க­ளில் ரூபா 40 மில்­லி­யனை செலவு செய்த இந்­தச் செயற்­பாடு வடக்கு ­மாகா­ணக் கல்வி வளர்ச்­சிக்கு எவ்­வாறு உத­வி­யது என்­பது பெரும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளது.

கல்வி வளர்ச்சி குறித்து திற­னாய்வு அவ­சி­யம்

அத்­து­டன் மிகுதி ரூபா 40 மில்­லி­ய­னுக்கு ஆசி­ரி­யர்­க­ளுக்­குத் தேவை­யான­ தள­பா­டங்­கள் பெறப்­பட்­ட­தாக அமைச்சு செய­லா­ளர் கூறி­யுள்­ளார். அந்­தத் தள­பா­டங்­கள் பற்­றிய விவ­ரம் ஆணைக்­கு­ழு­வுக்கு வழங்­கப்­ப­ட­வில்லை.

இன்­றும்­கூட எமது பாட­சா­லை­க­ளில் சுகா­தா­ரத்­துக்­கும் ஊறு­வி­ளை­விக்­கக்­கூ­டிய கரும்­ப­ல­கை­யும் வெண்­கட்­டி­க­ளும் பாவிக்­கப்­ப­டு­கின்­றன. இந்த நிலை­யில் நிதி ஆணைக்­கு­ழு­வால் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­ய­னில் ரூபா 40 மில்­லி­யன் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட மிகுதி ரூபா 40 மில்­லி­ய­னுக்­குத் தகுந்த விளக்­கம் எமக்­குத் ­தரப்­ப­ட­வில்லை.

இந்த ரூபா 40 மில்­லி­ய­கும் 12 கல்வி வல­யங்­க­ளில் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­ட­தன் மூலம் வட­மா­கா­ணக் கல்வி வளர்ச்­சி­யில் ஏதா­வது மாற்­றம் ஏற்­பட்­டதா? என்ற விட­யம் திற­னாய்­வுக்கு உட்­ப­டுத்த வேண்­டி­யது ஒன்­றா­கும். இந்த நிதி ரூபா 80 மில்­லி­ய­னை­யும் உப­யோ­கித்து ஆசி­ரி­யர்­கள் அதி­பர்­க­ளின் செயற்­றி­றனை அதி­க­ரிக்­கும் கொள்கை ரீதி­யா­கத் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டி­ருக்க முடி­யும். அவ்­வா­றான திட்­டம் எது­வும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவர்­கள் கற்­பிக்­கும் பாடத்­தி­லுள்ள அறிவு அத­னைக் கற்­பிக்­கும் முறை பற்­றிய அறிவு என்­பன தொடர்ச்­சி­யாக வளர்ச்­சி­ய­டைய வேண்­டும் என்­ப­தில் இரண்­டா­வது கருத்­துக்கு இட­மில்லை. எனவே இந்த நிதி­யைக் கொண்டு ஆசி­ரி­யர்­க­ளுக்கு அவர்­கள் கற்­பிக்­கும் பாடத்­தி­லான அறிவு அத­னைப் போதிக்­கும் ஆற்­றல் என்­ப­வற்றை வளர்க்­கக் கூடிய பயிற்­சி­களை அந்­தத் ­துறை­யில் அறி­வும் அனு­ப­வ­மும் உடை­ய­வர்­கள் மூல­மாக வழங்கி கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்த இந்த நிதி­யைத் திட்­ட­மிட்­டுப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்க முடி­யும்.

நிதி வீண் விர­யம் நடந்­தது உண்­மையே

வடக்கு ­மாகாண மாண­வர்­க­ளுக்கு ஒரு சிறந்த எதிர்­கா­லத்தை உரு­வாக்­கிக் கொடுக்­கக்­கூ­டிய ஒரே வள­மாக அமை­வது கல்­வியே ஆகும். வடக்கு மாகா­ணம் ஒரு காலத்­தில் கல்­வி­யில் மிக முன்­னே­றிய நிலை­யில் இருந்­தது. இந்­தக் கல்­வி­வ­ளம் போர்க்­கா­லத்­தில் தொடர்ச்­சி­யா­கச் சீர­ழிக்­கப்­பட்­டுப் பூச்­சி­யம் என்ற நிலைக்கு வந்­தது. ஆயி­னும் தற்­போது அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாணர்­கள் ஆகி­யோ­ரது அய­ராத உழைப்­பால் இந்த மாகா­ணத்­தில் கல்வி மீண்­டும் வளர்ச்­சி­ய­டைய ஆரம்­பித்­துள்­ளது.

இந்த நிலை­யில் 2015ஆம் ஆண்டு நிதி ஆணைக்­கு­ழு­வின் அறி­வு­றுத்­த­லால் வழங்­கப்­பட்ட ரூபா 80 மில்­லி­ய­னும் உரிய வகை­யில் தகுந்த கொள்கை அடிப்­ப­டை­யில் மாண­வர்­கள் பய­ன­டை­யக்­கூ­டிய வகை­யில் திட்­ட­மி­டப்­பட்டு ஆசி­ரி­யர்­க­ளி­ன­தும் அதி­பர்­க­ளி­ன­தும் தகு­தியை உயர்த்­து­வ­தற்­கு­ரிய மேற்­ப­டிப்­புக்­கள் பயிற்­சி­கள் போன்­ற­வற்­றி­லும் கற்­பிக்­கும் ஆற்­றலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பின் அது மிக­வும் வர­வேற்­கத்­தக்­க­தாக அமைந்­தி­ருக்­கும்.

இதற்­குப் பதி­லாக இந்­தப் பணத்­தில் ரூபா 40 மில்­லி­யன் 2 நாள்­க­ளில் செலவு செய்­யப்­பட்­ட­தும் மிகுதி ரூபா 40 மில்­லி­யன் ஆசி­ரி­யர்­க­ளின் தள­பாட கொள்­வ­ன­வுக்­குப் பயன்­ப­டுத்­தி­ய­தா­கக்­கூ­றப்­பட்­ட­மை­யும் மிக­வும் கவ­லைக்­கு­ரிய வகை­யில் இந்­தப் பணம் வீண் விர­ணம் செய்­யப்­பட்­டதை நிரூ­பிக்­கின்­றது.
கணக்­காய்வு அவ­சி­யம்

எனவே வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ருக்கு எதி­ரான இந்­தக் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது என்ற முடி­வுக்கு இந்த விசா­ர­ர­ணைக்­குழு வரு­கின்­றது. மேலும் இந்­தத் தொகை ­ரூபா 80 மில்­லி­ய­னும் எவ்­வாறு செலவு செய்­யப்­பட்­டது என்­பது குறித்து முழு­மை­யான கணக்­காய்வு செய்­யப்­பட்டு தவறு இழைத்­த­தா­கக் காணப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் இந்த விசா­ர­ணைக்­குழு பரிந்­து­ரைக்­கின்­றது.

வட­மா­கா­ணத்­தில் வாழும் மக்­க­ளுக்கு வழி­காட்­டும் பொறுப்பை தம் கரங்­க­ளில் ஏந்­தி­யுள்­ள­வர்­கள் கொள்­கை­கள் திட்­டங்­கள் என்­ப­வற்றை வகுக்­கும் வேளை­யில் இந்த மக்­கள் கடந்த காலங்­க­ளில் அனு­ப­வித்த துன்ப துய­ரங்­கள் கடந்து வந்த பாதை என்­ப­வற்றை ஒரு தட­வை­யா­வது திரும்­பிப்­பார்க்க வேண்­டும் என்றே இந்த விசா­ர­ணைக்­குழு கரு­து­கின்­றது.

ஆளு­ந­ரால் நடத்­தப்­பட்­ட­வைக்கு அமைச்­சர் பொறுப்­பா­ளி­யல்ல

3.8) மாகா­ணப்­ பாட­சா­லை­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி­யில் முன்­னாள் அரச தலை­வ­ரின் வரு­கைக்­காக ஆறு தேசி­யப் பாட­சா­லை­களை அலங்­க­ரிப்­ப­தற்கு பெருந்­ தொகைப் பணத்­தைச் செல­வ­ழித்­தமை.

மேற்டி குற்­றச்­சாட்டு தொடர்­பில் பதி­ல­ளித்த வட­மா­கா­ணக் கல்வி பண்­பாட்­ட­லு­வல்­கள் விளை­யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சர், “தமது அமைச்­சின் செய­லா­ள­ருக்கு மாகாண ஆளு­நர் கூறியே இந்த விட­யம் நடை­பெற்­ற­தா­கக் கூறி­யி­ருந்­தார்.

இந்த விட­யம் தொடர்­பில் கொள்கை அடிப்­ப­டை­யி­லான முடிவு எது­வும் வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­ச­ரால் எடுக்­கப்­ப­டாத நிலை­யில் மாகாண ஆளு­ந­ரால் கைய­ளிக்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்­தும் செய­லா­ளர் ஆளு­ந­ரின் கோரிக்­கைப் ­படி செயற்­பட்­ட­மைக்கு அமைச்­சர் பொறுப்­புக்­கூற வேண்­டி­ய­தில்லை என இந்த விசா­ர­ணைக் ­குழு கரு­து­கின்­றது.

3.9) கிளி­நொச்சி வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ளர் முரு­க­வே­ளின் சேவைக் ­காலம் முடி­வுற உள்ள நிலை­யில் வேறு பொருத்­த­மான பணிப்­பா­ளர் ஒரு­வரை நிய­மிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை இது­வரை எடுக்­கா­மல் ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் அவ­ரது சேவை­யைத் தொட­ரு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றமை.

வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர் நிய­ம­னத்­தில் அமைச்­சர்
தலை­யி­டு­வது தவறு

இந்­தக் குற்­றச்­சாட்டு குறித்து சாட்­சி­ய­ம­ளித்த கல்வி அமைச்­சர், “வல­யக் ­கல்­விப்­ பணிப்­பா­ளர் பத­விக்கு விண்­ணப்­பம் கோரு­வ­தில்லை என்­றும் சேவை மூப்பு அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் செய்­வது என்­றும் தற்­போது தென்­ம­ராட்சி கல்­விப்­ பணிப்­பா­ளரை பதிற்­க­ட­மைக்கு நிய­மித்­துள்­ளோம் என்­றும் சாட்­சி­ய­ம­ளித்­தார். இது தவ­றன நிலைப்­பா­டா­கும்.

இந்த ­நிய­ம­னங்­க­ளில் தலை­யிட அமைச்­ச­ருக்கு எந்­த­வித அதி­கா­ர­மும் கிடை­யாது. அர­ச­மைப்­பின் பிர­கா­ரம் மாகாண ஆளு­ந­ருக்கே இந்த அதி­கா­ரம் உண்டு. அவர் யாருக்கு அந்த அதி­கா­ரத்தை கைய­ளித்­துள்­ளாரோ அவரே அர­சி­யல் தலை­யீடு எது­வும் இன்றி அந்­தக் கட­மை­யைச் செய்ய வேண்­டும்.

எனவே அமைச்­சின் செய­லா­ளர் அல்­லது வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்­குழு இவர்­க­ளில் யாருக்கு இந்த அதி­கா­ரம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளதோ அவர்­கள் இந்த நிய­ம­னத்­தைப் பொறுப்­பேற்று அர­சி­யல் தலை­யீடு எது­வு­மின்றி தகுதி உடை­ய­வரை இந்­தப் பத­விக்கு உடன் நிய­மிக்க வேண்­டும் என­வும் வட­மா­காண கல்வி அமைச்­சர் இந்த நிய­ம­ன­மத்­தில் தலை­யி­டக்­கூ­டாது என­வும் இந்த விசா­ர­ணைக்­குழு பணிக்­கின்­றது. மேலும் இந்­தக் குற்­றச்­சாட்­டா­னது எதிர்­கா­லத்­தில் நிக­ழ­வி­ருக்­கும் ஒரு­வி­ட­யம் தொடர்­பா­ன­தா­கை­யால் இந்­தக் குற்­றச்­சாட்டை விசா­ர­ணைக்­குழு நிரா­க­ரிக்­கின்­றது.

அமைச்­சர் ஐங்­க­ர­நே­ச­னுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­கள்

4.1) வவு­னியா மாவட்­டத்­தில் மூங்­கில், மல்­லிகை வளர்ப்­புத் திட்­டங்­கள், எள்ளு விநி­யோ­கித்து சுய­தொ­ழிலை முன்­னெ­டுக்க வைக்­கும் திட்­டம் ஆகி­ய­வற்றை கையூட்­டுப் பெறும் நோக்­கத்­துக்­காக நிரா­க­ரித்­தமை.

இலங்­கை­யில் நடை­மு­றை­யி­லுள்ள சட்­டங்க ளின் படி ஓர் விவ­சாயி தனது காணி­யில் வேறு சட்­டங்­க­ளால் தடை செய்­யப்­பட்ட பயிர்­க­ளைத் தவிர, தான் விரும்­பிய பயிரை பயி­ரி­டும் உரிமை உண்டு. ஆனால் நீர்ப்­பா­ச­னச் சட்­டத்­தின் படி அர­சால், மாகாண சபை­யால் பரா­ம­ரிக்­கப்­பட்டு வரும் நீர்ப்­பா­சன நீர்த் தேக்­கங்­க­ளி­லி­ருந்து குறிப்­பிட்ட பயி­ருக்கு நீர் பெற வேண்­டு­மெ­னின், குறிப்­பிட்ட தகுதி வாய்ந்த அரச, மாகாண உத்­தி­யோ­கத்­தர்­க­ளி­ட­மி­ருந்து அனு­ம­தி­யைப் பெற வேண்­டு­மென்ற கட்­டுப்­பாடு உள்­ளது.

வடக்கு மாகாண சபை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் தரைக்­கீழ் தரை­மேல் உள்ள நீரை உப­யோ­கித்­தல், பயிர்ச்­செய்­கைக்கு பாவித்­தல் என்­பதை கட்­டுப்­ப­டுத்­தும், ஒழங்­கு­ப­டுத்­தும் நிய­திச் சட்­டங்­கள் எது­வும் நிறை­வேற்­றப்­பட்­டுள் ளதா­கத் தெரி­ய­வில்லை.

எனவே விவ­சாயி ஒரு­வர் தனது சட்­ட­பூர்வ உரித்­து­டைய காணி­யில் மழை நீரையோ, நிலத்­தடி நீரையோ, உப­யோ­கித்து தனது வாழ்­வா­தா­ரத்தை உயர்த்­து­வ­தற்­காக, உண­வுக்­கா­கவோ, வர்த்­தக தேவைக்­காக எந்­த­வித பயிர்­க­ளையோ மரப் பயிர்­க­ளையோ பயி­ரி­டும் உரிமை அவர்­க­ளுக்கு உண்டு என்று விசா­ர­ணைக் குழு கரு­து­கின்­றது.

மேற்­படி கரு­து­கோ­ளின் அடிப்­ப­டை­யில் மேற்­படி குற்­றச்­சாட்­டில் விட­யங்­களை தொடர்­பாக விசா­ர­ணை­யின் போது முன்­வைக்­க­பட்ட விட­யங்­க­ளை­யும் அவற்­றுக்­குத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளது விளக்க சாட்­சி­யங்­க­ளை­யும் இறு­தி­யில் அமைச்­ச­ரால் விசா­ர­ணைக்­கு­ழு­ வுக்கு அறிக்­கப்­பட்ட விளக்­கங்­க­ ளும் மேற்­படி குற்­றச் சாட்­டு­கள் விசா­ர­ணை­ யின் பொழுது சந்­தே­கத்­துக்கு அப்­பாற்­பட்ட முறை­யில் எண்­பிக்­கப்­பட்­டுள்­ள­னவா? என ஆராய்­வோம்.

முத­லீட்­டா­ளரை சந்­திக்க அழைத்­தமை அமைச்­சர் மீது
சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது

வவு­னியா நெடுங்­கேணி பிரதேச செய­லர் பிரி­வில் இந்­திய முத­லீட்­டா­ளர் ஒரு­வ­ரா­கிய ராம் என்­ப­வர் மூங்‌கில் செய்­கை­யில் விவ­சா­யி­ களை ஊக்­கு­விக்­கும் திட்­டம் ஒன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு முன்­மொ­ழிவு ஒன்றை முன்­வைத்து நெடுங்­கே­ணிப் பிர­தேச செய­லர் தலை­மை­யில் கூட்­டம் ஒன்­றைக் கூட்டி திட்­டத்­தின் நன்மை தீமை­களை எடுத்­து­ரைத்தார்.

இது வெளி­நாட்டு முத­லீடு என்ற கார­ணத்­தால் மாகாண முத­மைச்­ச­ரின் அனு­ம­திக்கு விண்­ணப்­பித்து முத­ல­மைச்­ச­ரால் அந்த விண்­ணப்­பம் மாகாண விவ­சாய அமைச்­ச­ருக்கு முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. ஆனால் மாகாண விவ­சாய அமைச்­சர் அந்­தத் திட்­டத்தை அனு­ம­திக்க மறுத்­து­விட்­டார். முத­லீட்­டா­ளர் மாகாண ஆளு­ந­ரி­டம் அனு­ம­தி­யைப் பெற்று திட்­டத்தை அந்­தப் பிர­தே­சத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

மாகாண விவ­சாய அமைச்­சர் மூங்­கில் வளர்ப்­புத் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை மறுத்­த­தோடு, குறிப்­பிட்ட முத­லீட்­டா­ ளரை வேண்­டிய ஆவ­ணங்­க­ளு­டன் வந்து தன்னை சந்­திக்­கும்­படி கேட்­டுள்­ளார். தன்னை வந்து சந்­திக்­கும்­படி கோரி­யமை மாகாண விவ­சாய, கம­நல சேவை கால்­நடை அபி­வி­ருத்தி, நீர் வழங்­கல், உணவு வழங்‌கல் விநி­யோ­கித்­தல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­ச­ரின் நடத்தை மீது சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்த விட­யம் தொடர்­பாக விசா­ர­ணைக்­குழு முன் விளக்­க­ம­ளித்த அமைச்­சர், “மூங்­கிலை எரித்து மின்­சா­ரம் பெறும், அதா­வது அனல் மின் நிலை­யம் அமைப்­பதை சுற்­றுச்­சூ­ழல் அமைச்­சர் என்ற ரீதி­யில் தான் அனு­ம­திக்க முடி­யா­தென்­றும் அவ்­வா­றெ­னில் காற்­றாலை மின்­சா­ரம் பெற மாகாண சபை­யு­டன் ஒப்­பந்­தம் செய்­தது போல ஒரு தொகைப் பணத்தை வரு­டாந்­தம் CSRஇற்கு வழங்க வேண்­டும்” என­வும் குறிப்­பிட்­டார். இது அவ­ரது கருத்­தில் உள்ள இரட்­டைத்­தன்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது.

இந்த விட­யத்­தில் விவ­சாய, கம­ந­ல­சேவை கால்­நடை அபி­வி­ருத்தி நீர் வழங்­கல், உணவு வழங்­கல் விநி­யோ­கித்­தல், சுற்­றா­டல் மற்­றும் கூட்­டு­றவு அமைச்­சர் மாகாண சபைி­யல் சுற்­றுச் சூழல் அமைச்­சர் என்ற சட்­ட­பூர்­வ­மற்ற நிலைப்­பாட்டை வைத்­துக்­கொண்டு இந்த விட­யங்­க­ளில் தலை­யி­டு­வ­தை­யும் விசா­ர­ணைக் குழு கவ­னத்­தில் எடுத்­துள்­ளது.

தொடரும் .....

நன்றி - உதயன் 
2 நாள்க­ளில் செல­வா­கிய ரூ. 40 மில்­லி­ய­னால் வட­மா­கா­ணத்­தில் கல்வி வளர்ச்சி ஏற்­பட்­டதா? Reviewed by NEWMANNAR on June 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.