அண்மைய செய்திகள்

recent
-

பூமிக்கு அடியில்....சீனாவின் சாதனை....


சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரெயில் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் அங்குள்ள மெட்ரோ ரெயில் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையத்தில் இந்த 31 மாடி கட்டிடம் அமைய உள்ளது. இது சுமார் 94 மீற்றர் ஆழம் வரை செல்லக் கூடியதாகும்.

சாலையில் இருந்து பூமிக்கு அடியில் ரெயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டு (எக்ஸ்லேட்டர்) அமைக்கப்படுகிறது. அதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள ரெயில்வே பிளாட்பாரங்களுக்கு 3 நிமிடத்தில் செல்ல முடியும்.

இந்த திட்டத்தின் மூலம் உலகில் உள்ள மிக ஆழமான மெட்ரோ ரெயில்களில் இதுவும் ஒன்று என்ற பெருமையை இது பெறுகிறது.

தற்போது வடகொரியாவில் 110 மீற்றர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இதுவே பூமிக்கு அடியில் உள்ள மிக ஆழமான மெட்ரோ நிலையம் என்ற பெருமையை தக்கவைத்து வருகின்றது.

ரெயில் போக்குவரத்தில் சீனா அதிவேகமாக முன்னேறி வருகிறது. புல்லட் ரெயில், சுரங்க பாதை ரெயில், பறக்கும் ரெயில் என சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பூமிக்கு அடியில்....சீனாவின் சாதனை.... Reviewed by Author on July 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.