அண்மைய செய்திகள்

recent
-

கிழக்கில் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள உளவளத்துணை பிரிவு


கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக பொலிஸ் நிலையம் ஒன்றில் உளவளத்துணை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் இந்த பிரிவு நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக உளவளத்துணை உட்பட பல்வேறு சேவைகளையாற்றி வரும் தேவைநாடும் மகளிர் அமைப்பினால் குறித்த கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேவைநாடும் மகளிர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் ஒரு பகுதியில் இந்த உளவளத்துணை பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தின் மூலம் பெண்கள், சிறுவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு வரும்போது அவர்களுக்கு ஆற்றுப்படுத்தல்கள் வழங்குதல் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உளவியல் ரீதியான ஆற்றுகைகளை செய்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த நிலையத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும்.

குறித்த நிகழ்வின் போது, மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர, மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், தேவைநாடும் அமைப்பின் பிரதிநிதிகள், சூரிய பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒரு அமைப்பின் உளவளத்துணை அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

கிழக்கில் முதன்முறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள உளவளத்துணை பிரிவு Reviewed by Author on August 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.