அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவவிழா-2017...Photos)

மன்னார் கள்ளியடி  அருள்மிகு  கற்பகவிநாயகர் ஆலய ஏவிளம்பி வருட அலங்கார உற்சவவிழா 

நான்கு பக்கமும் கடலால்  சூழப்பட்ட இலங்கைத்திருநாட்டில் மாதோட்டம் என்னும் நகரிலே  அமைந்துள்ள  திருக்கேதிச்சர பக்கத்தில் அமைந்துள்ள  கள்ளியடி கற்பக பிள்ளையார்  இலக்குமி தாயார்,பாலமுருகன்,நவநாயகர் வைரவர்,சண்டீஸ்வரர் முதலான பரிவார மூர்த்திகளுக்கு நிகழும் மங்கள கரமான ஏவிளம்பி வருட ஆடி மாதம்
14ம் நாள் சஷ்டி திதியும் சித்திரை நட்சத்திரம் கூடிய  சுபயோக சுபதினத்தில் 29-07- 2017அன்று  சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு   ஆரம்பமாகி  தினமும் புண்ணியாக வாஜனம்.கணபதி ஹோமம்,விசேட கும்பபூஜை, அபிஷேகம் இடம்பெற்று  விஷேட பூஜை பிரசாதம் வழங்கல்  இடம்பெறுவதோடு மாலை விசேட பூஜையும் ஒவ்வொரு நாளும் 10நாட்களும் அன்னதானமும்  இடம்பெற்றதோடு இன்று 07-08- 2017 வசந்த மண்டப பூஜையுடன் கற்பகவிநாயகப்பெருமான் உள்ளும் புறமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்கடாட்சம் வழங்கினார்.

கிரியாகால குருக்கள்

பிரதிஷ்டா பிரதமகுரு
சிவஸ்ரீ.தியாக கருநாணந்தக் குருக்கள்
பிரதம குரு-திருக்கேதீச்சர திருத்தலம்

ஆலய நித்திய பூசகர்
பிரம்ம ஸ்ரீ.திஷாகர் சர்மா
E.குகன் சர்மா

மங்கள வாத்தியம்
திரு.பா.பாலசுந்தர் குழுவினர்
திருக்கேதீச்சரம்

பூமலை திரு.சிவசந்திரன்
திருக்கேதீச்சரம்

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலைகள் தீருமே

















































-VM-KAJENTHIRAN- 








மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பகவிநாயகர் ஆலய வருட அலங்கார உற்சவவிழா-2017...Photos) Reviewed by Author on August 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.