அண்மைய செய்திகள்

recent
-

'மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி' எனும் கருப்பொருளில் கையொழுத்து வேட்டை மன்னாரில் ஆரம்பிப்பு-(படம் இணைப்பு)


'மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி' எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாட்டில் செய்திருந்த கையொழுத்து வேட்டை இன்று(2) புதன் கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் இயக்குனர் வை.கஜேந்திரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கையெழுத்து வேட்டையானது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

மன்னார் மாவட்டத்திற்கு வரவேற்பு கோபுரம் அமைக்கப்பட வேண்டும்,மன்னார் மாவட்டத்திற்கு மணிக்கூட்டுக்கோபுரம் அமைக்கப்பட வேண்டும்,மன்னார் மாவட்டத்திற்கு மின் சமிக்கை விளக்குகள் பொருத்துதல்,மன்னார் பொது நூலகத்தை சிறப்பாக உருவாக்குவதோடு,கிராமப்புறங்களி ல் உள்ள நூலகங்களை தரமுயர்த்த வேண்டும்,மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து வேட்டையினை சர்வ மதத்தலைவர்கள் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து மக்கள்,சமூக ஆர்வலர்கள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

மக்களின் கையெழுத்துக்களுடன் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்,மன்னார் நகர சபையின் செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.













'மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி' எனும் கருப்பொருளில் கையொழுத்து வேட்டை மன்னாரில் ஆரம்பிப்பு-(படம் இணைப்பு) Reviewed by NEWMANNAR on August 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.